இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
’’இலங்கை அரசுக்கும், இந்தியாவுக்குமான உறவு தற்போது நெருக்கமானதாக தெரியவில்லை’’-விக்னேஸ்வரன் பேட்டி
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நான்கு நாள் ஒய்வு எடுப்பதற்காகவும் சித்த வைத்திய சிகிச்சைக்காகவும் நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சிக்கு இன்று காலை வந்தார். பின்னர் அவர் அருகில் உள்ள குற்றாலம் நிகழ்ச்சிக்காக சென்றார். இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாக தெரியவில்லை, ஆனால் சீனாவுடனான நெருக்கத்தை இலங்கை அரசு…
சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை முன்வைப்பு
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் எதிர்கட்சி…
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய திட்டம்: ரணில்…
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் புதிய திட்டமொன்று முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அமைச்சர்கள் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று…
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொது மக்களின் காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை…
மனித உரிமை ஆணைக்குழுவுடன் உடன்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவத்…
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன், சிறிலங்கா இராணுவம் இன்னமும் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணியொன்று ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு கடந்த பெப்ரவரி…
பிரபாகரன் உருவானது எப்படி?;விளக்கம் சொன்ன ராஜித
எதிர்கட்சி தலைவர் பதவி வகித்த திரு.அமிர்தலிங்கத்தை அந்த பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நீக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததனாலேயே பிரபாகரன் உருவானதாக சுகாதார போசாக்கு மற்றும் ஊடக பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தற்போது அந்த பதவியை வகிக்கின்றார். எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன்…
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கூறிய திடுக்கிடும் தகவல்கள்!
வவுனியா காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக்கொண்டுள்ளனர் என பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டாா்.…
தமிழ் பிரதேசங்களில் தென்பகுதி மக்களை குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின்…
எமது மக்கள் சொந்த இடங்களிலே மீள்குடியமர முடியாத நிலை உள்ள போது பெருங்காடுகளை அளித்து தென்பகுதி மக்களை இங்கு குடியேற்றம் செய்வது நல்லாட்சி அரசின் இரட்டைவேடத்தையே குறித்து நிற்கிறதென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா தாயகம் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
‘குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது’
“வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நேற்று (11) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மகாவலி எல் வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில்…
வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன்…
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கேள்வி – பதில் வடிவத்தில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இந்த வருடம்…
விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்?
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும்,…
அரசிடம் அடிபணியாமல் தீர்வைப் பெற்றே தீருவோம்! – இது உறுதி…
“அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு விடாமுயற்சி செய்துகொண்டிருக்கும் முக்கிய தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்களின் ஆதரவு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரிந்திருக்கிறது. 75, 80 சதவீதமானோர் வாக்களித்த கூட்டமைப்புக்கு இந்தத் தடவை 35 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அப்படியானால் மக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.…
உடன்பாட்டை மீறிய சிறிலங்கா இராணுவம் – கருத்து வெளியிட மறுப்பு
ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ.நாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா…
‘இந்திய அரசாங்கமும் பொறுப்புக் கூறவேண்டும்’
“13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான காணிச் சட்டத்துக்கு அமைவாக தமிழ் மக்களுக்கு உரித்தாக அவர்களுக்குரித்தாக அவர்களின் பூர்விகக் காணிகள் இருந்திருக்க வேண்டும். இத்திருத்தச் சட்டத்தில் இந்திய அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. இது தொடர்பில் இந்தியஅரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபையினர் முல்லைத்தீவில் போராட்டம்
முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து,…
‘தானாக கனியும் பழத்தை தடியால் தட்டுவது தவறு’
“தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கே இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆகையால், அதனைச் செய்து முடிப்பதற்காக சரி, இந்த அரசாங்கம் இன்னும் சில நாட்களுக்கு உயிர்வாழவேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “தானாகக் கனியும் பழத்தை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா” என்றும் கேள்வியெழுப்பினார். “அவ்வாறு கனிய…
பெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் வரவு செலவுத்திட்டத்தில்…
நாட்டில் இத்தனை அழிவுகளும், சோதனைகளும் வந்தும் பெண்கள் யாருக்கும் சோர்ந்து போகாமல் பெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்புவதாக மகளீர் தின விழாவில் இலங்கை தமிழ் அரசுக் காட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்……, நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த முறை…
ரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 கோரிக்கைகளை முன்வைத்து அவருடன் பேச்சுக்களை…
முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தப்போவதில்லை: எம்.ஏ.சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதத்துடன் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் பூர்த்தியாகின்றது. இந்த நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சுமந்திரன்…
கண்டி வன்முறை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மார்ச் மாதம் முதல் வாரத்திர், கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும்…
விடுதலைப் புலிகளின் நிலத்தடி காவலரண் கண்டுபிடிப்பு
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் சிறப்பு தளபதி ஒருவரால் தாக்குதல் கட்டளை வழங்கிய நிலத்தடி காவலரண் ஒன்று முல்லைத்தீவு பெருங்காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளைத்தளபதி ஒருவர் இந்த காவலரணில் இருந்து கட்டளைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாப்புலவு – புதுகுடியிருப்பு பிரதான வீதியில்…
கூட்டமைப்போடு ரணில் எந்தவித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை: மனோ கணேசன்
தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக எந்தவித உடன்பாட்டிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திடவில்லை என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தெகிவளையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது,…
ஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்கா இராணுவம் – மனித உரிமை…
ஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல், லெபனானுக்கு, இராணுவத்தினரை அனுப்பியதன் மூலம், இந்த மீறல் இடம்பெற்றுள்ளதாக, சிறிலங்கா அதிபருக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…























