கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் தமிழ் மகளிர் வித்தியாலயத்திற்கு சிங்கள அருட்சகோதரி ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாணவிகளும் அசிரியர்களும் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அதிபராகக் கடமையாற்றும் குறித்த சிங்கள அதிபர் தமிழ் மொழி பேசத் தெரியாதவர் என்பதால், பாடசாலையில் நிர்வாக விடயங்களில் பெரும்…
முறையற்ற வரி விதிப்புக்கு எதிராக போராட்டம் : அவசர பிரிவை…
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் (திங்கட்கிழமை) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ…
இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பை தவறவிட்ட ஜி 20 நாடுகள் :…
அண்மையில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் உலகளாவிய ஆய்வாளரும் கொள்கை ஆலோசகருமான சன்ஹிதா அம்பாஸ்ற் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை…
விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்…
இலங்கைக்கு ஏற்பட்ட பெரும் வியாபார இழப்பு – துறைமுகத்தை விட்டு…
இலங்கை துறை முகத்திற்கு வந்திருந்த சரக்கு கப்பல்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் காரணமாகவே, நாட்டிற்கு வருகை தந்திருந் 17 கப்பல்களும் திரும்பி சென்றுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…
எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் வாழ்ந்தவர் மீட்பு
நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியிலேயே இவர் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையிலேயே…
ஐ.நாவிடம் இலங்கை இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் விடுத்துள்ள…
ஐ. நாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில், யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடைசெய்யுமாறு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG), ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுபோல, ஏனைய மனித…
இலங்கையில் இன்று முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை
இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின்…
நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கைது
தமிழ்நாட்டில் உள்ள 3 அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆறு இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் நியூசிலாந்திற்கு ஒரு படகு வழியாக தப்பி செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் தமிழ்…
மஹிந்தவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -if
தமிழின அழிப்புக்கு சர்வதேச நிதி உதவி
மட்டக்களப்பு - மயிலந்தனையில் மாதுறு ஓயா திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் துணை போகக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார். அபிவிருத்தித் திட்டம்…
இந்திய முட்டைகளால் இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்
இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் என விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைக் காய்ச்சல் அதிகம் உள்ள தமிழகத்திலிருந்து முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பறவைக்…
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வரலாற்றில் முதல் முறையாக முக்கிய ரயில்கள்…
தொலைதூரப் பகுதிகளுக்கான பிரதான ரயில் சேவைகள் வரலாற்றில் முதல் தடவையாக இரத்துச் செய்யப்படும் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுள்ளதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு வலயத்திற்குட்பட்ட மாஹோ, கல் ஓயா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதான புகையிரதங்கள், குறிப்பாக தொலைதூரப் பிரதேசங்களில் ஆளணிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
தேர்தலை நடத்துவதா இல்லையா நாடாளுமன்றமே தீர்மானிக்கும் – நீதிமன்ற தீர்ப்பிற்கு…
இவ்வருடம் தேர்தலுக்கான வருடம் அல்ல, தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை, இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்." இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு…
தமிழீழ விடுதலைப் புலிகளின் 9 ஆயுத கப்பல்களை அழிக்க அமெரிக்கா…
அமெரிக்காவின் புலானாய்வு தகவல்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒன்பது ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும், அவர்களை தோற்கடிப்பதற்கும் உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேர்காணலொன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருகோணமலையில் இராணுவ தளமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காகவே சமீபத்தில் அமேரிக்காவின் உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்…
இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்த திட்டம்
இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் இலங்கையில் நேரடியாக தமது பணத்தை பயன்படுத்த முடியும் இதன்போது இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணயமாக…
முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம் அதன்பின்னர் தேர்தலை பற்றி சிந்திப்போம்
நாடு பொருளாதார ரீதியில் வீழ்த்துள்ளமை தெரிந்திருந்தும் தேர்தலை நடத்துமாறு சிலர் பிடிவாதமாக இருக்கின்றனர். இது தேர்தலை நடத்துவதற்கான காலம் அல்ல நாட்டை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது. இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்த…
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது:…
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு தற்போது அவசியமானதாக இருந்தாலும், உண்மையில் அது தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். இது தொடர்பிலான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.…
எந்தத் தேர்தல் நடந்தாலும் வெல்லப்போவது நாமே – பஸில்
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட முடியாது என்றும்…
தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது…
இராணுவத்தினர் கடமைக்கு இடையூறு : யாழில் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி…
சீனாவை தொடர்ந்து இலங்கையில் கால் பதிக்கிறது ரஷ்யா
இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான யோசனையுடன் ரஷ்யா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளது. இலங்கை அணுசக்தி நிலையத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா இரண்டு அரசுகளுக்கு இடையேயான வேலைத்திட்டமாகவே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வழிகாட்டல் குழு இந்நிலையில், ரஷ்யா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் இந்த விடயத்தை ஆய்வு செய்ய வழிகாட்டல்…
இலங்கைக்கு 1,500 பயிற்சி இடங்களை வழங்கும் இந்திய பாதுகாப்புப் படைகள்
இந்திய பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 பயிற்சி இடங்களை இலங்கைக்கு வழங்குகின்றன, அவற்றுக்கு ஆண்டுதோறும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சிறப்புத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படுவதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு வருகை தந்த இந்திய கடற்படை கப்பலான…
உள்ளூராட்சி தேர்தல் தாமதம் குறித்து விசாரணை நடத்தவுள்ள மனித உரிமை…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமடைவது குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. தேர்தல் தாமதமாவது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதப்படுத்தப்படுவது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசாரணை இந்த…