11 போலீஸ்காரர்களின் “தொல்லை”: எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தாம் 11 போலீஸ்காரர்களால் உடல் ரீதியான தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறும் வோங் பீ போங், 39, அது குறித்த நடவடிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக கூறுகிறார். தாம் இன்று வரையில் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் அச்சம்பவம் குறித்து செய்த புகார் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து எவ்வித…

பெர்சே: நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் பிஎஸ்சி-யால் பயனில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  பொதுத் தேர்தலை நடத்த முடிவெடுத்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டியிருக்கும் என்பதால் தேர்தல் சீர்திருத்ததுக்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) அமைக்கப்படும் நோக்கம் பயனற்றுப் போய்விடும் என்று பெர்சே 2.0 கூறுகிறது. பிஎஸ்சி அதன் பணியை முடிக்கிறதோ இல்லையோ அடுத்த தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்று…

கிளந்தான் அம்னோ செப்டம்பர் மாதம் தேர்தல் வெள்ளோட்டத்தை நடத்துகிறது

கிளந்தான் அம்னோ, தேர்தலுக்கான வெள்ளோட்டத்தை செப்டம்பர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தும் என அதன் தலைவர் முஸ்தாப்பா முகமட் அறிவித்துள்ளார். தற்போது கிளைத் தலைவர்களுக்கு அந்தத் தேர்தல் வெள்ளோட்டத்தை ஒட்டி கட்டம் கட்டமாக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் சொன்னார். "அம்னோ உறுப்பினர்களிடையே உணர்வுகள்…

டிஏபி: தேர்தல் சீர்திருத்தத்தில் நஜிப்புக்கு உண்மையில் ஈடுபாடு இல்லை

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் அதன் பணியை முடிப்பது முடியாத காரியம்போல் தோன்றுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அப்படி ஒரு குழுவை அமைத்தது ஏன், அவருக்கு அதில் உண்மையான ஈடுபாடு உண்டா என்று டிஏபி கேள்வி எழுப்புகிறது. “தேர்வுக் குழுவை…

பிஎன், இராணுவத்தை அரசியலுக்குள் இழுப்பதாக பாஸ் சாடுகிறது

இராணுவத்தைக் கட்சி அரசியலுக்குள் கொண்டு வர சில தரப்புக்கள் முயலுவதாகத் தோன்றுகிறது- அது மாமன்னரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும் என பாஸ் கூறுகிறது. இராணுவம் மாமன்னருடைய நேரடிப் பார்வையின் கீழ் வருவதால் அத்தகைய முயற்சிகள் அகோங்கிற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். சுதந்திரம் பெற்றது…

வாக்காளர் பட்டியலில் 12க்கும் மேற்பட்ட தவறுகள் இருப்பது திண்ணம்

"தணிக்கை நிறுவனம் ஒன்று புள்ளி விவரக் களஞ்சியம் கணினி முறை ஆகியவற்றின் நேர்மையை   ஆராய்ந்து எல்லாத் தவறுகளையும் கண்டு பிடித்து துய்மையானதாக மாற்ற வேண்டும்."         வாக்காளர் பட்டியல் தவறுகள் 0.0001 விழுக்காடு மட்டுமே என தேர்தல் ஆணையம் கூறுகிறது ஹென்ரி ஹாக்: தேர்தல்…

படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் எனக் கூறியதை நிலை நிறுத்த பாஸ்…

வாக்காளர் பட்டியலில் ஆவி வாக்காளர்களும் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களும் இருப்பது உண்மை என பாஸ் இளைஞர் பிரிவு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் என அந்தப் பிரிவு கூறியதை நிராகரிக்கும் வகையில் பல செய்திகளை உள்ளூர் மலாய் நாளேடு ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து அது அவ்வாறு…

பெர்காசா: மலாய்த் தலைவர்கள் கிறிஸ்துவர் வாக்குகளுக்காக “தவியாய்த் தவிக்கிறார்கள்”

பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த மலாய்த் தலைவர்கள் கிறிஸ்துவர் வாக்குகளைப் பெறத் “தவியாய்த் தவிக்கிறார்கள்” என்றும் அதற்காக “இஸ்லாத்தின் கண்ணியத்தையே விற்கிறார்கள்” என்று மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இம்மாதத் தொடக்கத்தில் பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில் மதமாற்ற நடவடிக்கையின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை உள்பட…

மலாய்க்காரர்கள் ஒன்றுபடாவிட்டால் அந்நியர் தலையிடுவர் என்று மகாதிர் அச்சம்

நாட்டில் முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்துக் கவலை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்கள் மூன்று பிரிவினராக பிரிந்து கிடக்கிறார்கள் என்றார். இந்நிலை தொடருமானால், அந்த ஒற்றுமைக்குறைவைச் சாதகமாக்கிக் கொண்டு அந்நியர் தலையீடு நிகழலாம் என்றாரவர். அம்மூன்று பிரிவினரும், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளதுபோல் ஆயுதமேந்திப் போராடவில்லையே…

“எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது?”

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள்  பற்றி ஊடகங்களில் சுட்டிக்காட்டியவுடன் தேர்தல் ஆணையம் (இசி) அதில் ‘டக்கென்று’ திருத்தம் செய்வது ஒரு கேள்வியை எழுப்புகிறது; தேர்தல் ஆணையம் தன் விருப்பப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடியுமா? கடந்த இரு வாரங்களாக, பொதுமக்களும் மாற்றரசுக் கட்சியினரும் பல குறைபாடுகள் வாக்காளர் பட்டியலில்…

பிஎஸ்சி குறித்து கருத்துரைக்க இசி மறுப்பு

தேர்தல் சீர்திருத்தங்கள்மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி) அமைப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கிக்கொள்ள தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. இன்று செய்தியாளர்கள், இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்பிடம் அரசாங்கம் முன்மொழிந்த அக்குழுவில் இடம்பெறுவோர் குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் கருத்துக்கூற மறுத்தார். அவரின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான்…

வாக்காளர் பட்டியலில் தவறுகள் 0.0001 விழுக்காடே என்கிறது இசி

வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதை இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள 12.4 மில்லியன் வாக்காளர்களில் அவை 0.0001 விழுக்காடே என்று அவர் சொன்னார். "12.4 மில்லியனுக்கு 0.0001 விழுக்காடு என அந்த எண்ணிக்கை சிறிதாக…

“பக்காத்தான் வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச சம்பளத்துக்கு முன்னுரிமை”

பக்காத்தான் ராக்யாட் தயாரிக்கும் மாற்று வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுக்கப்படும் விஷயங்களில் குறைந்த பட்சச் சம்பளமும் ஒன்றாகும். இவ்வாறு அந்த மாற்று வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பக்காத்தான் கூட்டணி பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்துக்குப் பின்னர் பாஸ் கோலசிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் அதனை அறிவித்தார். அக்டோபர்…

தாஜுடின் தொடர்புகளை முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரி உறுதி செய்கிறார்

மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிரான வழக்குகளை ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீட்டுக் கொண்டு ஏதாவது ஒரு வகையில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிடுவதற்கு முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் கோலாலம்பூர்…

ஜெனரல், இராணுவத்துக்கு அவமானத்தை கொண்டு வந்து விட்டார்

அஞ்சல் வாக்கு தில்லுமுல்லுகள் எனக் கூறப்படுவதை அம்பலப்படுத்திய தரப்புக்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின், தமது சகாக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த சட்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அந்த ஜெனரல் நாடு, மக்கள் என்ற அடிப்படையிலான விசுவாசம்…

‘ஜெனரல் சுல்கிப்லி அவர்களே, இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்து…

"நாட்டுக்குச் சேவை செய்வதற்காக கீழ் நிலை அதிகாரிகள் ஆயுதப் படைகளில் சேர்ந்தனர். அம்னோவுக்கு சேவை செய்ய அல்ல. நீங்கள் அவர்களுக்கு தவறு செய்து விட்டீர்கள். அவர்களுக்குத் துரோகம் புரிந்தது நீங்களே."       "நீங்கள் விசுவாசமாக இல்லை என்றால் நாங்கள் எப்படி உங்களுக்கு விசுவாசமாக இருப்பது?" மஹாகுருபோலே:…

சுஹாகாம்: நாடாளுமன்ற குழுவுக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழு அவ்விவகாரம் மீது பல்வேறு அமைப்புகள் வழங்கியிருக்கும் கருத்துகளை விசாலமாக விவாதிக்க போதிய அவகாசம் கொடுக்கப்படும் என்று நம்புவதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்ததை வரவேற்ற…

அந்த ‘ஜேம்ஸ் பாண்ட் வாக்காளர்கள்’ மனிதத் தவறு என்கிறது தேர்தல்…

வாக்காளர் பட்டியலில் இல்லாத மை கார்டு எண்களுடன் பல வாக்காளர்கள் இருப்பது பற்றிய செய்தியை மலேசியாகினி நேற்று வெளியிட்டது. அதற்கு மனிதத் தவறு காரணம் என இன்று தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது. Read More

பாஸ்: பினாங்கில்”வெளிநாட்டில்-பிறந்த” 14,000 வாக்காளர்கள்

பினாங்கு பாஸ், அம்மாநில வாக்காளர் பட்டியலில் 14,000 ‘அந்நியர்கள்’ வாக்காளர்களாக இடம்பெற்றிருப்பதை அடையாளம் கண்டிருப்பதாகவும் அது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இம்முறைகேட்டைக்  கட்சியின் தேர்தல் குழு கண்டுபிடித்ததாக மாநில பாஸ் இளைஞர் பகுதிச் செயலாளர் அப்னான் ஹமிமி தாயிப் அஸாமுடின் கூறினார். அவர்களின் அடையாள அட்டையில்…

தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதை இராணுவத் தளபதி மறுத்தார்

தேர்தல் மோசடியில் தாங்கள் சம்பந்தப்பட்டதாக முன்னாள் ஆயுதப் படை வீரர்கள் சிலர் கூறிக் கொள்வது, துரோகச் செயல் என ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின் வருணித்துள்ளார். இன்று பிற்பகல் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான அறிக்கை ஒன்றில் சுகிப்லி அந்தக் குற்றச்சாட்டுக்களை கூறியவர்களைக் கடுமையாகச் சாடியதுடன்…

பக்காத்தான்: தேர்தல் குழுவில் பிஎன் “எங்களை விழுங்கி விடும்”

தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்து பக்காத்தான் ராக்யாட் எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். பிஎன் ஆதரவு சுயேச்சை ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்பது அந்த ஆட்சேபத்துக்கு முக்கியக் காரணம் என மலேசியாகினியிடம் அவர்கள் தெரிவித்தனர். "அந்தக் குழுவில் பக்காத்தான் எப்படி வாக்களிக்க வேண்டும்?"…

இண்ட்ராப் வழக்குரைஞர் நாடுகடத்தப்பட்டது மீது ஏன் இந்த மெளனம்?

கருத்தாக்கம் - டாக்டர் லிம் டெக் கீ மக்களின் எதிர்ப்புணர்வையும் மனச்சாட்சியையும் உசுப்பிவிட்டு, அதிகாரத்தையும் பலத்தையும் மூர்க்கத்தனமாகப் பயன்படுத்தும்  பிஎன்னுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வைத்த இண்ட்ராப்புக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை மலேசியர்களில் பலர் மறந்து விட்டார்கள். ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஏழை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள்,…

புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பதற்றமடையத் தேவையில்லையா?

கடந்த 15 ஆகஸ்டு 2011-ல் மலேசிய நண்பனில் வெளிவந்த கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் சரவணனின் அறிக்கையின் உண்மை நிலையை கேட்டு கடிதம் ஒன்று இன்று புக்கிட் ஜாலில் தோட்ட மக்களால் அவரது பணிமனையில் வழங்கப்பட்டுள்ளது. அவரின் பத்திரிகை அறிக்கை படி, "புக்கிட் ஜாலில் தோட்ட…