ஓணம் பண்டிகை: மலையாளிகள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகின்றனர்

உள்ளூர் மலையாளி சமூகம் வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் மண்டபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறது. அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் மையமாக 20 அடி நீளமுடைய மேடையில் 50 அடி நீளம் கொண்ட நாக வடிவிலான படகு ஒன்றை செலுத்துவது திகழும். சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச மலையாளி…

அன்வாருடைய இரண்டாவது புதல்வி நிபோங் திபாலில் போட்டியிடலாம்

அன்வார் இப்ராஹிமின் இரண்டாவது புதல்வி நுருல் நுஹா அன்வார் அடுத்த பொதுத் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம். பகுதி நகர்ப்புறக் கலப்புத் தொகுதியான அதில் போட்டியிடுவதற்குச் சாத்தியமான வேட்பாளராக நுஹாவை பிகேஆர் நிப்பொங் திபால் தொகுதி முன்மொழிந்திருப்பதை பினாங்கு பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான்  நேற்று…

நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: டிஏபி குமுறல்

பிஎன், அது வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதாக சீன நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்திக்குப் பிரதமர் பதிலுரைக்க வேண்டும் என்று டிஏபி எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறப்பு ஒதுக்கீடு என்ற வகையில் இவ்வாண்டு ரிம 513,957,100 ஒதுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் பெண்டேரா எம்பி லியு…

புக்கிட் கெப்போங் பற்றி விவாதிப்பதை பாஸ் இளைஞர்களிடம் மாட் சாபு…

புக்கிட் கெப்போங் சம்பவம் மீது ஏற்பாடு செய்யும் விவாதத்தில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதினுடன் மோதுவதற்கு தாம் பாஸ் இளைஞர்களை அனுமதித்து விட்டு தாம் விலகிக் கொள்வதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு இன்று அறிவித்துள்ளார். Read More

இந்தியர் விவகாரங்கள்: பிஎன், பக்காத்தான் தலைவர்கள் அலசி ஆராய்வர்

வார இறுதியில், ஷா ஆலமில், பிஎன், பக்காத்தான் தலைவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவர். அரசியலின் இரு தரப்புகளையும் சேர்ந்த பெரும்புள்ளிகளும் இந்திய அரசுசாரா அமைப்புகளும் (NGO) கலந்துகொள்ளும் அந்த அரங்கம், “வாக்குகளைப் பெறுவதற்காக இந்தியர் மனம்கவரும் போர்க்களமாக விளங்கும்” என்று…

பெர்த் பயணம், பல கேள்விகளை எழுப்புகிறது

“எந்த நாட்டிலும் சுதந்திர நாளில் நாட்டின் தலைவர் காணமல்போயிருக்க மாட்டார். எல்லா வகை தப்புத் தவறுகளுக்கும் மலேசியாதான் முன்மாதிரி”. Read More

கிராண்ட் சாகா டோல் கட்டணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செராஸ்-காஜாங் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரும் மகஜருக்கு கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தை டிஏபி தலைமையில் குடிமக்கள் நடவடிக்கைக் குழு இன்று மேற்கொண்டது. செராஸுக்கு அருகில் உள்ள 9வது மைலில் அமைந்துள்ள டோல் கட்டண சாவடியில் அந்தக் குழு கையெழுத்துக்களை திரட்டும்…

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மலேசியாவின் “தங்கச் சுரங்கம்”

"சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் 'கடத்தலில்" குடிநுழைவு அதிகாரிகளும் வேலை வாய்ப்பு முகவர்களும் கூட்டாக இயங்குகின்றனர்."           வில்கிலீக்ஸ்: மனிதக் கடத்தலில் குடிநுழைவுத் துறையும் சம்பந்தப்பட்டுள்ளது ஊழியர்: மாதச் சம்பளம் 1,300 ரிங்கிட்- ஒன்பது ஆண்டுகள் தவணைக்காலத்தைக் கொண்ட பெரோடுவா காருக்கு 300 ரிங்கிட், பெட்ரோலுக்கு…

பெர்னாமா ஊழியரைக் கொன்ற துப்பாக்கிக் குண்டு ஆப்பிரிக்க ஒன்றிய துருப்புக்கள்…

பெர்னாமா தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் நோராம்பைசுல் முகமட் நோரைக் கொன்று, டிவி 3 நிருபருக்கு காயத்தை ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டுகள் ஆப்பிரிக்க ஒன்றியத் துருப்புக்கள் சுட்டவையாகும். இவ்வாறு மேற்கத்திய ஆப்பிரிக்க செய்தி நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. "இந்த வேளையில் உண்மை நிலவரங்கள் தெளிவாக தெரியவில்லை. சூழ்நிலை குறித்து நான் சோமாலிய…

இந்தியப் பிரதமரும் அமைச்சர்களும் தங்கள் சொத்துக்களை அறிவித்தனர்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது 30 அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சொத்துக்களை இன்று அறிவித்துள்ளனர். Read More

கிளந்தான் அம்னோ தேர்தலுக்கு முழு அளவில் தயார்

கிளந்தான் மாநில அம்னோ தனது 14 தொகுதிகளின் தலைவர்களையும் அவர்களுடைய தொகுதிகளுக்கான தேர்தல் இயக்குநர்களாக நியமித்துள்ளது. அதனால் தேர்தல் நெருங்குகிறது என்னும் ஊகங்கள் வலுத்துள்ளன. Read More

உங்கள் கருத்து: நம் நாட்டை குடியேறிகளிடம் விற்ற துரோகிகள்

வாக்குகளுக்காக ஆயிரக்கணக்கான பிலிப்பினோக்களும் இந்தோனிசியர்களும் சபாவில் குடிமக்களாகினர். இப்போது தீவகற்ப மலேசியாவிலும் அது தான் நடக்கிறது.   Read More

அம்னோ இனவாதப் பார்வையில் வரலாறு

"புக்கிட் கெப்போங் அம்னோ காட்டும் மலாய்-எதிரணி-சீனர்கள் என்னும் வாதத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மாட் சாபு அந்த விஷயத்தை தலைகீழாக மாற்றி- அந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு மலாய்க்காரர் என்கிறார்."         எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் நீங்கள் சொல்வதை ஒட்டுக் கேட்கலாம் கறுப்பு மம்பா:…

சாபாவில் ஆர்சிஐ அமைய சாத்தியமில்லை

சாபாவின் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீது அரச விசாரணை ஆணையம் அமைவதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய ஆவணம் ஒன்று தெரிவித்துள்ளது. அது “மகாதிர் கால அரசியல்வாதிகளின்” சுயநலத்தின் காரணமாக உருவான பிரச்னையாம். விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணம், கூட்டரசு அரசாங்கமும் அம்னோவும் அரசியல் ஆதரவுபெறும்…

பேராயர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்களை உறுதி…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டு முழுமை பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பேராயர் மர்பி பாக்கியம் கேட்டுக் கொண்டுள்ளார். "சக மலேசியர்கள் என்னும் முறையில் நாங்கள் சிறந்த மலேசியாவைக் காணும் பொது நோக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். தேர்தல் சீர்திருத்தத்திற்கான நடைமுறைகள்…

விக்கிலீக்ஸ் தகவலை சபா சபாநாயகர் சாலே மறுக்கிறார்

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கூட்டரசு அரசாங்கத்தை எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் முயற்சி தோல்வி கண்டது மீது தாம் சொன்னதாகக் கூறப்படும் கருத்துக்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை சபா மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் சாலே சைட் கெருவாக் மறுத்துள்ளார். "பக்காத்தான் ராக்யாட்டுக்கு அல்லது…

கட்சித்தாவல் ஓர் அருவருக்கத்தக்கச் செயல்

“தவளைகள் அவர்கள் பிஎன் ஆள்களோ பக்காத்தான் ஆள்களோ, அவர்கள் யார் தங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த மக்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதால் அவர்களை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.”   விக்கிலீக்ஸ்: செப்டம்பர் 16 என்று அன்வார் கூறியதில் உண்மை உண்டு பெயரிலி_4031: 2008 செப்டம்பர் 16,…

சோமாலியாவில் மலேசியப் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார்

சோமாலியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மலேசியப் பத்திரிக்கையாளர், சண்டை நிகழும் சோமாலியத் தலைநகர் மொஹாடிசுவில் ஆப்பிரிக்க ஒன்றிய துருப்புக்களுக்கும் துப்பாக்கிக்காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையில் சிக்கிக் கொண்டார் என அதிகாரிகள் கூறினர். "ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது மலேசியப் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்தார்",…

எச்சரிக்கையாக இருங்கள்: அவர்கள் நீங்கள் சொல்வதை அவர்கள் ஒட்டுக் கேட்கலாம்

"மாட் சாபு அந்த நிகழ்வு குறித்து மாற்று விளக்கத்தை அளித்துள்ளார். புக்கிட் கெப்போங் தாக்குதலுக்கு மலாய்க்காரர் ஒருவர் தலைமை தாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது."       பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது; திசை திருப்புவதாக பிஎன்-னைச் சாடுகிறது பார்வையாளன்: சுதந்திரத்துக்கு பங்காற்றிய அம்னோ அல்லாத…

தேசிய நாளன்று பிரதமர் எங்கே?

கடந்த புதன்கிழமை மலேசியா நோம்புப் பெருநாளையும் தேசிய தினத்தையும் கொண்டாடியபோது பிரதமர் நஜிப் இக்கொண்டாட்டங்களில் காணப்படவில்லை. ஆகஸ்ட் 30 இல் இஸ்தானா நெகாராவில்  பேரரசர் அளித்த அரச ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கடைசியாகக் காணப்பட்டார். அடுத்த நாள், அவரது தேசிய நாள் செய்தியை பேஸ்புக் மற்றும்…

ஹிண்ட்ராப்பின் இன ஒழிப்பு கூற்று “மிகைப்படுத்தப்பட்டது”

ஆளும் பிஎன் கூட்டணி இந்தியர் இன ஒழிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக்  கூறுவது  "'மிகைப்படுத்தப்பட்டது" என 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூரக குறிப்பு ஒன்று கூறியது. அதனால் ஹிண்ட்ராப்பின் சட்டப்பூர்வ போராட்டத்துக்கான "பொது மக்கள் அனுதாபம் குறையும்" என அந்தக் குறிப்பு தெரிவித்தது. அந்தக் குறிப்பை வில்கிலீக்ஸ்…

பாஸ்: கெடா “எம்பி”-யை மாற்றும் திட்டம் இல்லை

பாஸ் கட்சி , கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் நோயுற்றிருப்பதால் அவரின் இடத்தில் மற்றொருவரை நியமனம் செய்ய விரும்புகிறது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தியை   மறுக்கிறது. "தமக்குப் பதில் இன்னொருவரை அமர்த்தும் பாஸின் முயற்சியை அசிசான் எதிர்க்கிறார்" என்ற தலைப்பில் த ஸ்டாரில் வெளிவந்துள்ள செய்தியைக்…

செப்.16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருந்தனர், விக்கிலீக்ஸ்

அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த ஆவணத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் 2008, செப்டம்பர் 16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாக பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியது  உண்மைதான் என்று கூறுகிறது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த ஆவணம், சாபாவின் 25 எம்பிகளில் பெரும்பாலோர் பிஎன்னைவிட்டு வெளியேறத்…