தீபாவளி: நாடாளுமன்ற கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது சரியான நடவடிக்கை, குலசேகரன்

தீபாவளிக்கு முதல்நாள், அக்டோபர் 25, 2011, நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாது என்ற முடிவு வரவேற்கப்புக்குரியது. மக்களவைத் தலைவர் அம்முடிவை இன்று அறிவித்தார். நாடாளுமன்ற கூட்டம் அக்டோபர் 25 இல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு வருத்தப்பட வேண்டியதொன்றாகும் என்று கூறிய டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்,…

“கிறிஸ்துவ ஆட்சி”: உத்துசான் உரிமத்தை ரத்து செய்வீர், எம்பி

"போலியான அறிக்கையை வெளியிட்டதற்காகவும்" பினாங்கு மாநிலத்தில் ஒரு கிறிஸ்துவ ஆட்சியை உருவாக்க கிறிஸ்துவ ஆயர்கள் சதி செய்தனர் என்ற கூற்றுக்கு தீபம் போட்டதற்காகவும் உத்துசான் மலேசியாவின் உரிமத்தை உள்துறை அமைச்சு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

பேரணி எதிர்ப்பு நிலையை அறிவித்த “துணிச்சலான மூவரை” ஆயர் பாராட்டுகிறார்

"கிறிஸ்துவ எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி விட வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக விவேகமான முடிவை எடுத்துள்ள" பாஸ், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஆகியோரை கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் பாராட்டியுள்ளார். ஆசிய ஆயர்கள் மாநாட்டில்…

யூஐஏ அஜிஸ் பேரி-க்கு காரணம் கோரும் கடிதத்தை வழங்கியுள்ளது

அண்மையில் மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விவகாரங்களில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்த பின்னர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்கு அந்தப் பல்கலைக்கழகம் காரணம் கோரும் கடிதத்தை வழங்கியுள்ளது. மலாய் மொழியில் சுருக்கமான யூஐஏ என அழைக்கப்படும் அந்த பல்கலைக்கழகம்…

முதலில் எம்சிஎம்சி, இப்போது போலீஸ் அசீஸ் பாரியிடம் விசாரணை

சிலாங்கூர் சுல்தான் அறிக்கைமீது மலேசியாகினி செய்தித்தளத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக போலீசார் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரியை விசாரித்துள்ளனர். அம்னோ செனட்டர் முகம்மட் எசாம் முகம்மட் செய்த புகாரின் தொடர்பில் இன்றுகாலை ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இரு போலீஸ் அதிகாரிகள் அவரை அரசநிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை…

ஹிம்புன் குறித்து அஞ்சற்க: பாஸுக்கு அமைச்சர் ஜமில் அறிவுறுத்தல்

மதமாற்றத்துக்கு எதிரான பேரணி (ஹிம்புன்) ஓர் உள்ளரங்கில் நடைபெறுகிறது என்பதால், அது  சமயப் பதற்றநிலையை உண்டுபண்ணலாம் என்று பாஸ் கவலைகொள்ள வேண்டியதில்லை எனப்  பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் கூறியுள்ளார். இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமில் கீர், ஹிம்புன் ஏற்பாட்டாளர்கள், அப்பேரணியை ஷா ஆலம்…

கிறிஸ்துவ நாடாக்கும் சதித்திட்டம் இருப்பது உண்மை, முன்னாள் டிஏபி ஆதரவாளர்

முன்னாள் டிஏபி உறுப்பினர் முகம்மட் ரசாலி அப்துல் ரஹ்மான், “சில தரப்பினர்” இவ்வாண்டு தொடக்கத்தில் தாம் அம்பலப்படுத்திய “கிறிஸ்துவ சதித்திட்ட”த்தை மறுப்பதன்வழி பொதுமக்களைக் குழப்பி வருகிறார்கள் என்று எச்சரித்துள்ளார். “இவ்விவகாரத்தை ஆய்வு செய்துவரும் அதிகாரிகளின் நம்பகத்தன்மை குறித்து எவரும் கேள்வி எழுப்பக்கூடாது....நான் அங்கிருந்தேன், அதனால் என்ன நடந்தது என்பது…

எம்சிஎம்சி ரயிஸின் “தனி போலீஸ்படை” அல்ல

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி)த்தைத் தம் தனிப்பட்ட போலீஸ்படைபோல் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. “அவ்வாறு செய்வது பேச்சுரிமையை மீற அதிகாரம் தப்பாக பயன்படுத்தப்படுவதற்கு  ஓர் எடுத்துக்காட்டாகும்”, என்று பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். “அதை உடனடியாக…

தீபாவளிக்கு முதல்நாள் நாடாளுமன்றக் கூட்டம் இல்லை

அக்டோபர் 25, தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் அன்று மக்களவை கூடாது. இதனை இன்று கேள்வி நேரத்துக்குமுன் அறிவித்த அவைத்தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், தீபாவளிக்கு முதல்நாள் முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு)  படையல் படைப்பார்கள், மறுநாள்…

மஇகா, மைன்கோ என்னும் நிறுவனத்தை அமைக்கிறது

அரசாங்கம் அறிவிக்கும் பல மேம்பாட்டுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மஇகா மைன்கோ பெர்ஹாட் என்னும் சிறப்பு நிறுவனத்தை அமைத்துள்ளது. அந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மலேசிய இந்திய சமூகம் பொருளாதார நன்மைகளை அடையும் பொருட்டு அந்த நிறுவனம் அமைக்கப்படுகிறது. எம்ஆர்டி ரயில் போக்குவரத்துத் திட்டம், பெரிய கோலாலம்பூர் மேம்பாட்டுத்…

பர்மியக் கைதிகள் பரிவர்த்தனை நாட்டின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும்

பர்மியக் கைதிகளை திருப்பி அனுப்பும் அரசாங்கத் திட்டம் மலேசியாவின் மனித உரிமை பதிவுகளுக்கு மேலும் காயத்தை ஏற்படுத்தும் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான சுவாராம் எச்சரித்துள்ளது. அந்த திட்டம் பர்மிய இராணுவ ஆட்சி மன்றத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒர் அங்கீகாரமாகக் கருதப்படலாம் என சுவாராம் அகதிகள் ஒருங்கிணைப்பாளர் அண்டிக்கா…

மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி: பாஸ் விவேகமான முடிவை எடுத்துள்ளது

"மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி, ஒரு சமயத்தை இன்னொரு சமயத்துக்கு எதிராகத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டது. அது நன்மையைக் காட்டிலும் தீமையையே அதிகம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளது." மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது நிக் வி: அந்தப் பேரணியில் பங்கு கொள்வதில்லை என…

மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது

ஷா அலாம் வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது. காரணம் அரசியல் கட்சிகள் அந்த நிகழ்வில் சம்பந்தப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகும். "அந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் ஏதும் சம்பந்தப்படவில்லை என பாஸ் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏற்பாட்டாளர்களுடைய…

அரசு நிகழ்வில் செக்ஸ் வீடியோவா, மறுக்கிறார் அமைச்சர்

கடந்த சனிக்கிழமை பேராக்கில் அரசு ஊழியர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்குமான ஒரு விளக்கக்கூட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்போல் தோற்றமளிக்கும் ஒருவரின் செக்ஸ் வீடியோ திரையிடப்பதாகக் கூறப்படுவதை அம்னோ தகவல்பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் மறுத்தார். அந்நிகழ்வில் செக்ஸ் வீடியோ எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று பிரதமர்துறை துணை அமைச்சருமான…

சுல்கிப்ளியுடன் வாதமிட அசீஸ் பாரியும் தயார்

அரசமைப்பு சட்டவல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டின் விடுத்துள்ள சவாலை ஏற்று அவருடன் வாதமிட தயார் என்று கூறியுள்ளார். ஆனால் சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனை கைவிடப்பட வேண்டும் என்றாரவர். “அவர் நேர்மையானவராக இருந்தால் இந்த நிபந்தனையின்றி…

கணக்கு அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும்?

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கணக்கு அறிக்கை, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வுக்கு அணுக்கமான வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது. இதை மற்றவர்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றபோது அவர்கள் அது சாத்தியமில்லை என்றனர். திங்கள்கிழமைதான் பொதுக் கணக்குக் குழு அந்த அறிக்கையை விவாதிப்பதற்காக ஒதுக்கியுள்ள நாளாகும் என்றவர்கள் கூறினர்.…

மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி மீதான நிலையை பக்காத்தான் இன்றிரவு…

ஷா அலாமில் வரும் சனிக்கிழமை முஸ்லிம்களுக்கான பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை திரட்டியதும் பாஸ், பிகேஆர் கட்சிகள் தனித்தனிக் கூட்டங்களை நடத்தும். இவ்வாறு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "அந்தப் பேரணியில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அதற்கு யார் ஆதரவளிக்கின்றனர் என்ற விவரங்களை நாங்கள் இன்னும் திரட்டி வருகிறோம்.…

“250,000 பேர் மதம் மாறியுள்ளனர்” எனக் கூறப்படுவதை பெர்லிஸ் முப்தி…

2008ம் ஆண்டு வரையில் கால் மில்லியன் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியிருப்பதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருப்பது, நம்புவதற்கு "பொருத்தமானதாக" இல்லை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார். "இந்த நாட்டில் 250,000க்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள் மதம் மாறியுள்ளதாக இணையத்தில் மக்கள் எழுதியிருப்பது பொருத்தமானதாக தெரியவில்லை.…

சாலாங்: நாங்கள் ஆனந்த கிருஷ்ணனை விசாரிக்கப் போவதில்லை

இந்தியாவின் சிபிஐ என்ற மத்தியப் புலனாய்வுத்துறை மலேசிய செல்வந்தரும் மாக்ஸிஸ் உரிமையாளருமான டி ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிராக சமர்பித்துள்ள வழக்கு மலேசியத் தொலைத் தொடர்புத் துறை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தகவல், பண்பாடு தொடர்பு துணை அமைச்சர் ஜோசப் சாலாங் கூறுகிறார். அந்தச் செல்வந்தருக்கு எதிராக…

கர்பால்: தீர்ப்பைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி பதவி துறக்க…

முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிம் இஷாக், தமக்கு எதிராக தீர்ப்பைத் திருடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் தமது பதவித் துறப்புக் கடிதத்தை சமர்பிக்க வேண்டும் என புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். "நீதித்துறையின் தோற்றத்தை பாதுகாக்கவும் நாட்டை மேலும் தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றவும் அவர்…

சிந்தனைக்குழு: 2020-க்குள் ரிம1 ட்ரில்லியன் கடன்

கூட்டரசு பட்ஜெட் கடன் ஆண்டுக்கு ரிம50பில்லியன் என்று உயர்ந்து வந்தால் 2020-தில் அத்தொகை ரிம1ட்ரில்லியனை எட்டிவிடும். சுயேச்சை சிந்தனைக் குழுவான சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு(ரெஃப்சா) மையம் இவ்வாறு அறிவித்துள்ளது. 2012 பட்ஜெட் மீது கண்ணோட்டம் இட்ட ரெஃப்சா, அரசாங்கம் நிதி விசயத்தில் விவேகமாக நடந்துகொண்டாலொழிய 2020 தொலைநோக்குத் திட்டம்…

குதப்புணர்ச்சி வழக்கு ll விசாரணை முடிவுக்கு வந்தது

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 87 நாட்களுக்கு விசாரணை நடைபெற்றது. இனிமேல் அரசு தரப்பு, பிரதிவாதித் தரப்பு ஆகியவற்றின் வாதத்தொகுப்பை உயர் நீதிமன்றம் செவிமடுக்க வேண்டும். 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி அன்வார் இப்ராஹிம், முகமட் சைபுல்…

அசீஸ் பாரியுடன் வாதமிட தயார், எம்பி சுல்கிப்ளி நோர்டின்

அரசமைப்பு சட்டவல்லுனர் அப்துல் அசீஸ் பாரி,  சிலாங்கூர் சுல்தான் கட்டளையை விமர்சித்ததால் எழுந்த சர்ச்சை ஓய்வதாக தெரியவில்லை.இப்போது சர்ச்சையிடும் கூட்டத்தில் கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டினும் சேர்ந்துகொண்டிருக்கிறார். அந்த சுயேச்சை எம்பி, அரசமைப்பு விவகாரங்கள்மீது சட்டவல்லுனருடன் வாதமிட ஆயத்தமாக இருப்பதாய் மலாய் செய்தித்தாள்களான பெரித்தா ஹரியானும்…