ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
NUBE இருவரின் வேலை நீக்கத்திற்கு எதிராக போலீஸ் புகார்
தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (என்யுபிஇ) மலாக்கா கிளை உறுப்பினர்கள் அச்சங்கத்தின் உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடினும் தலைமைப் பொருளாளர் சென் கா பாட்டும் ஜனவரி 31 ஆம் தேதி வேலை நீக்கம் செய்யப்பட்டதிற்கு எதிராக போலீஸ் புகார் செய்தனர். அப்புகாரை என்யுபிஇன் தெற்கு கிளை பொருளாளர்…
ராஜா நொங் சிக்கின் சவாலை ஏற்றனர் பக்காத்தான் எம்பிகள்
ஊழியர் சேமநிதிப் பணத்தைக் குறைந்த-விலை வீடுகளுக்கான கடனுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்துவதுமீது கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்குடன் விவாதமிட பக்காத்தான் எம்பிகள் மூவர் முன்வந்துள்ளனர். பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் (படத்தில் வலம் இருப்பவர்), டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுச் செயலாளர்…
MACC விசாரணை இறுதிக் கட்டத்தில், ஷாரிஸாட் விசாரிக்கப்படலாம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீதான தனது விசாரணை அறிக்கைகளை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் விரைவில் சமர்பிக்கும். எம்ஏசிசி விசாரணைகள் 'இறுதிக் கட்டத்தில்' இருப்பதாக அதன் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் முஸ்தாபார் அலி…
நமக்கு நம்பிக்கை வேண்டும் என நஜிப் இந்தியர்களிடம் கூறுகிறார்
இந்தியர்கள் இன்னும் அதிகமாகப் பெற விரும்பினால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். "இந்தியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலும் அரசு சாரா இந்திய அமைப்புக்களுக்கு அரசாங்கத்துக்கும் இடையிலும் பங்காளித்துவம் (partnership) தேவை," என பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி கூடிய ஆயிரக்கணக்கான…
காதலர் தினத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துமாறு அரசாங்கத்துக்கு பாஸ் இளைஞர்…
காதலர் தினத்துக்கு எதிரான இயக்கத்தை தொடங்குமாறு முஸ்லிம் இளைஞர் அமைப்பு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த காதலர் தினம் ஒழுக்கக் குறைவான நடவடிக்கைகளை மேம்படுத்துவதாக அது கூறிக் கொண்டது. பிப்ரவரி 14ம் தேதி அந்த தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடாமல் தடுப்பதற்கு காதலர் தின எதிர்ப்பு விளம்பரங்களை அரசாங்கம்…
மிதவாதத்தைக் கடைப்பிடியுங்கள் என பிரதமர் சாப் கோ மே விழாவில்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது மிதவாதச் செய்தியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த முறை அதனை அவர் சிலாங்கூர் ஜெஞ்சாரோம்-ல் சாப் கோ மே கொண்டாட்டங்களின் போது கூடியிருந்த 50,000 பேர்களிடம் கூறினார். "நாம் சமய ரீதியாக மாறுபட்டிருந்தாலும் எல்லா சமயங்களிம் மிதவாதம் காணப்படுகிறது. நம்மிடையே தீவிரவாதம்,…
பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஜோகூரில் களம்…
வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் ஜோகூரில் போட்டியிடுவார் என்ற வதந்திகளை அந்த மாநில பாஸ் கட்சி ஆனனயரும் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் உறுதி செய்துள்ளனர். அது குறித்து விவாதம் நடந்துள்ளதை உறுதி செய்த முஸ்தாபா இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.…
தேடப்படும் நபர் பத்தாமில் பிடிபட்டார்
பிகேஆரின் மூத்த அரசியல்வாதி ஒருவரின் அந்தரங்கச் செயல்களைக் காண்பிக்கும் புகைப்படங்கள் விநியோகம் செய்யப்பட்டதன் தொடர்பில் நடைபெறும் விசாரணைக்காக தேடப்பட்டுவரும் நபரை இந்தோனேசிய அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்தோனேசியாவின் பத்தாம் செண்ட்ரலில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக மலாய்மொழி ஏடான கோஸ்மோ! (Kosmo!) அறிவித்துள்ளது. ஆனால், அப்போலீஸ்…
“50 ஆண்டு கால ‘நம்பிக்கை’ போதாதா?”
"நஜிப் அவர்களே நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் எம்ஆர்எஸ்எம் என்ற மாரா கீழ் நிலை அறிவியல் கல்லூரிகளை தோட்டங்களைச் சேர்ந்த ஏழை இந்தியர்களுக்கும் புதுக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை சீனர்களுக்கும் திறந்து விடுங்கள்." இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் நஜிப் ஜனநாயகவாதி53: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் மலேசிய…
பேராக் ‘வீழ்ச்சியின்’ மூன்றாம் ஆண்டு நிறைவை பக்கத்தான் துக்கத்துடன் அனுசரித்தது
பேராக் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் இறுதி நாளை தங்களது பேராக் மாநில அரசாங்கம் வீழ்த்தப்பட்டதின் மூன்றாம் ஆண்டு நிறைவை 'துக்கத்துடன்' அனுசரித்தனர். ஈப்போ மேடான் இஸ்தானாவில் உள்ள மரம் ஒன்றின் கீழ் அவர்கள் இன்று சிறிது நேரம் ஒன்று கூடினர். பக்காத்தானில் உள்ள மூன்று…
ஷரிசாட்டின் விடுப்பை அமைச்சரவை நீட்டிக்க வேண்டும்
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவியும் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்குத் தொடர்பில்லை என்று எம்ஏசி இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்து விடுப்பில் இருப்பதுதான் முறையாகும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “ஷாரிசாட் முறைகேடுகள் எதிலும்…
இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் பிரதமர்
மலேசிய இந்துக்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது "நம்பிக்கை" வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நம்பிக்கையைக் கொண்டு அரசாங்கம் அந்த சமூகத்துடன் நம்பிக்கை' சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த சமூகம் சவால்களைச் சமாளிக்கவும் சிறந்த வாழ்க்கைக்கான தனிப்பட்ட இலட்சியங்களை அடைவதற்கும்…
பிரதமர்: சமூக நல நாடு பேரழிவைக் கொண்டு வரும்
பாஸ் வலியுறுத்துகிற சமூக நல நாடு கோட்பாட்டை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியிருக்கிறார். அந்த மாதிரியைப் பின்பற்றிய நாடுகள் இறுதியில் பொருளாதார குழப்பத்தில் மூழ்கியுள்ளன என அவர் சொன்னார் நஜிப் இன்று கிள்ளானில் சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்வில் உரையாற்றினார். சில ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்ற சமூக…
உத்துசான்: ஹாடி போட்டியிடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் உறுதியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு அது முக்கியமனது அல்ல என உத்துசான் மலேசியா ஆசிரியர் சுல்கிபி பாக்கார் கூறுகிறார். அதற்கு அப்துல் ஹாடியைக் காட்டிலும் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக்…
பெர்காசாவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதை மசீச நிறுத்த வேண்டும்
மசீச, அதன் உறுப்பினர்கள் மலாய்க்காரர்-அல்லாதாரை இரண்டாந்தர, மூன்றாம் தரக் குடிமக்களாக மட்டம் தட்டிவைக்கும் நோக்கம் கொண்ட பெர்காசாவின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிஏபி வலியுறுத்தியுள்ளது. மலேசியர் எவரும் பெர்காசாவுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தவறு என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்,…
ஹசன் அலி கூறுவதுபோல் புல்லுருவிகள் கட்சியில் இல்லை-பாஸ் இளைஞர்கள்
பாஸ் இளைஞர் பகுதி கட்சியில் உள்ள புல்லுருவிகளைக் களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசன் அலி கேட்டுக்கொண்டிருப்பது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கிறார் அதன் தலைவர் நஸ்ருதின் ஹசன். நேற்று அவரைத் தொடர்புகொண்டபோது அவர்,“நான் எந்தவொரு தரப்பினரும் சொல்வதைக்…
“வரி செலுத்தவில்லை என்றால் வாக்கு இல்லை” எனத் தாம் கூறவில்லை…
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் வரி செலுத்துவோர் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என தாம் யோசனை கூறவே இல்லை என இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுடைய தகுதியை நிர்ணயம் செய்யும் போது மற்ற…
செராஸ் அம்னோ: அம்னோ மகளிர் பிரிவை கவசமாகப் பயன்படுத்த வேண்டாம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன சர்ச்சையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்வதாக செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஷி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று வெளியான செராஸ் அம்னோ வலைப்பதிவில் அவ்வாறு…
“அரசாங்கம் பயன்படுத்துவது எங்கள் ஒய்வுக் கால நிதி”
"நீங்கள் விளையாடுவதற்கு அது உங்கள் தாத்தாவுடைய பணம் அல்ல. இபிஎப்-பிலிருந்து ஒரு சென் கூட எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை நான் பிரதமருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்." புவா: எளிதான வீட்டுக் கடன் இபிஎப் சட்டத்தை மீறுகிறது ரிக் தியோ: இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கு…
எதிர்ப்பு இருந்தாலும் கீத்தா கட்சியைக் கலைக்க ஜைட் உறுதி
கீத்தா என்ற Parti Kesejahteraan Insan Tanah Air கட்சியின் ஐந்து மாநிலத் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அந்தக் கட்சியை கலைக்கும் தமது நோக்கத்தைச் செயல்படுத்தப் போவதாக அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "அதற்கான தீர்மானம் இம்மாத இறுதியில் நடைபெறும் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில்…
நஜிப் பத்துமலைக்கு வரும் போது இண்ட்ராப் கையெழுத்து இயக்கத்தை நடத்தும்
இண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு விடுத்த கடந்த காலக் கோரிக்கைகளை பிரதமர் "நிறைவேற்றிய தவறியதை" ஆட்சேபிக்கும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடைபெறும் போது அந்த அமைப்பு 100,000 கையெழுத்துக்களை திரட்டத் திட்டமிடுகிறது. தைப்பூசத் தினத்தன்று காலை 9.00 மணிக்கு அந்த…
பழனிவேல் பேரா மஇகா தலைவர் பதவியை எடுத்துக் கொண்டுள்ளார்
பேராக் மஇகா தலைவர் பொறுப்பை அந்தக் கட்சியின் தலைவர் ஜி பழனிவேல் ஏற்றுக் கொண்டுள்ளார். அது உடனடியாக அமலுக்கு வருகிறது. பேராக்கில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கத்தை அந்த நடவடிக்கை கொண்டுள்ளதாக பழனிவேல் சொன்னார். "அந்த மாநில மஇகா கட்சியை மட்டுமின்றி வாக்காளர்கள் அடித்தளத்தையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது," என…
லினாஸுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆட்சேபம்
அணு எரிபொருள் அனுமதி வாரியம், லினாஸ் சுரங்க நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு நேற்று குவாந்தான் தெலுக் செம்பாடாக் கடற்கரையில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். குவாந்தான் கெபெங்கில் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு (Lynas…


