ஆர்ப்பாட்ட- வெறி வேண்டாம்: ஆத்திரம்கொண்ட கோலாலும்பூர் மக்களுக்கு கூ நான் அறிவுறுத்தல்

1 adnanகோலாலும்பூர் மாநராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி வரும் சொத்துடைமையாளர்கள் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார்.

சொத்துமதிப்பீட்டு வரி தொடர்பான புகார்களையும் பின்னூட்டங்களையும் பரிசீலிக்க அவகாசம் தேவை என்றாரவர்.
டிசம்பர்  17-வரை புகார்களையும் பின்னூட்டங்களையும் தெரிவிக்கலாம்.

டிசம்பர் 16-இல், டாட்டாரான்  டிபிகேஎல்-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு அந்த வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு எதிரணி எம்பிகள் மக்களுக்கு விடுத்துள்ள அறைகூவலுக்கு எதிர்வினையாக தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார்.

“ஆர்ப்பாட்டம் செய்யாதீர். புகாரைப் பதிவு செய்யுங்கள் போதும்….ஆர்ப்பாட்ட-வெறி வேண்டாம். ஏன் வீண் தொல்லை?”, என்றாரவர்.