புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் மே 25

penangகர்பால்  சிங்  காலமானதால்  காலியான  புக்கிட்  நாடாளுமன்றத்  தொகுதிக்கான  இடைத்  தேர்தல்  மே  25-இல்  நடைபெறும். அதற்கான  வேட்புமனு  தாக்கல்  செய்யும்  நாள்  மே 12.

தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  அப்துல்  அசீஸ்  யூசுப்  இன்று  இதனை  அறிவித்தார்.

2004-இலிருந்து  கர்பால்   வசமிருந்த  தொகுதி  அது.  அங்கு  களமிறங்கும்   வேட்பாளரை  டிஏபியோ  பிஎன்னோ  இதுவரை  அறிவிக்கவில்லை.