சிரம்பானில் தாக்கப்பட்ட கன்னித்துறவி காலமானார்

nunகடந்த  புதன்கிழமை  சிரம்பான்  தேவாலயம்  ஒன்றில்  தாக்கப்பட்ட  இரண்டு  கன்னித்துறவிகளில்  ஒருவர்  இறந்து  போனார்.

ஜூலியானா  லிம், 69, இன்று பிற்பகல்  மணி  3.25க்கு சிரம்பான்  மருத்துவமனையில் உயிரிழந்தார்  என  அறிவிக்கப்பட்டது.
அவரின்  வழக்குரைஞர்  ஜோய்  அப்புக்குட்டனும்  அதை  உறுதிப்படுத்தினார்.

“இன்பெண்ட்  ஜீசஸ் (ஐஜே) ஸிஸ்டர்ஸ்  விரைவில்  ஓர்  அறிக்கை  வெளியிடும்”,  என்றாரவர்.

லிம்மும்  ஸிஸ்டர்  மேரி  ரோஸும்  காலைநேரத்  தொழுகைக்காக  சென்றபோது  விசிடேஷன்  தேவாலயத்துக்கு  வெளியில்  தாக்கப்பட்டனர். கொள்ளையிடுவதுதான்  இத்தாக்குதலுக்குக்  காரணம்  என்று  தெரிகிறது.