ராம்கர்பால் ‘ஓரினச் சேர்க்கையாளரா’என்று வினவிய செய்திதாளுக்குக் கண்டனம்

jagdeepபுக்கிட்  குளுகோர்  வேட்பாளர்  ராம்கர்பால்  சிங்கை  நோக்கி “நீங்கள்  ஓரினச்  சேர்க்கையாளரா”  என்று  கேள்வி  எழுப்பிய  சீன  நாளேடு  ஒன்று கண்டனத்துக்கு  இலக்கானது.

ராம்கர்பால்  சிங்  அவரது முகநூல்  பக்கத்தில்  பலசாளி  ஆண்களின் படங்களைப்  பதிவேற்றுவதையும்  38 வயதாகியும்  இன்னும்  திருமணம்  செய்துகொள்ளாமல்  இருப்பது  ஏன்  என்றும் பார்டி  சிந்தா  மலேசியா  வேட்பாளர்  ஹுவான்  செங்  குவான்  வினவியதை  அடுத்து  அச்செய்தித்தாள்  இக்கேள்வியை  எழுப்பியது.

இப்படி  ஒரு  கேள்வியை  எழுப்பித்  தங்கள்  குடும்பத்தையே  அசிங்கப்படுத்தி  விட்டார்கள்  என்று  ராம்கர்பாலின்  அண்ணன்  ஜக்தீப்  சிங்  டியோ  கடிந்து  கொண்டார்.

செய்தித்தாள்களை மதித்தவர்  கர்பால். ஆனால்,  அவை  உண்மையை  ஆராயும்  தங்கள் கடனையை  முறைப்படிச்  செய்யத்  தவறிவிட்டன  என்றவர் வருத்தப்பட்டார்.

நிரந்தர  நண்பர்களோ  நிரந்தர  பகைவர்களோ கிடையாது  ஆனால்,  நிரந்தரக்  கொள்கைகள்  உண்டு  என்று  கர்பால்  அடிக்கடி  சொல்வதை  நினைவுபடுத்திய  ஜக்தீப்,  இது  பத்திரிகைகளுக்கும்  பொருந்தும்  என்றார்.

நேற்று  ராம்கர்பாலிடமே  நேரடியாக  அக்கேள்வி  கேட்கபட்டது.  தாம்  ஓரினசேர்க்கையாளர்  என்று  கூறப்பட்டதை  மறுத்த  அவர்,  தேர்தல்  பரப்புரை  திசைதிரும்பி இருப்பியதை  எண்ணி  வருத்தமடைவதாகக்  குறுப்பிட்டார்.