தெராஸ் பிஎன்னில் அனுமதிக்கப்பட்டால் ‘போர்தான்’: தியோங் எச்சரிக்கை

tiongபார்டி  தெனாகா  ரக்யாட்  சரவாக்,  பிஎன்னில்  சேர்த்துக்கொள்ளப்பட்டால்  “வெளிப்படையான  போர்”  வெடிக்கும்  என  சரவாக்  முற்போக்கு  ஜனநாயகக்  கட்சி (எஸ்பிடிபி) இடைக்காலத்  தலைவர்  தியோங்  கிங்  சிங்  அறிவித்துள்ளார்.

“அடுத்த  மாநிலத்  தேர்தலில்  இப்போது  பிஎன்  பங்காளிக்  கட்சிகளுக்கு  ஒதுக்கப்படும்  இடங்களில்  ஏதாவது  ஒன்றில்  தெராஸ்  போட்டி  இட்டால்கூட  பகிரங்க  போர்தான்”, என்று  தியோங்  நேற்றிரவு  அறிக்கை  விடுத்திருந்தார்.

பிஎன்னின்  மூன்று   பங்காளிக் கட்சிகளும்  எந்தத்  தொகுதியையும்  இழக்கத்  தயாராக  இல்லை  என்றாரவர்.