வேந்தர்: மாரா பல்கலைக்கழகம் மலாய்க்காரர்களுக்கே

uitmயுனிவர்சிடி  டெக்னலோஜி  மாரா(யுஐடிஎம்)  மலாய்க்காரர்களுக்கு  உயர்க்  கல்வி  வழங்கும்  கல்விக்கழகமாக  தொடர்ந்து  பாதுகாக்கப்பட  வேண்டும்  என  அதன்  இணை- வேந்தர்  டாக்டர்  அப்துல்  ரஹ்மான்  அர்ஷாட்  கூறுகிறார்.

யுஐடிஎம்,  மலாய்க்காரர்களுக்கும்  மற்ற  பூமிபுத்ராக்களுக்கும்  கல்வி  வாய்ப்புகளை  வழங்குவதற்காக  அரசமைப்பின்  153வது  விதிப்படி  அமைக்கப்பட்டது  என்று  குறிப்பிட்ட  அவர்,  அச்சலுகைகளை  எதிர்ப்பது  அரசமைப்பை  மீறுவதாகும்   என்றார்.

அதை  எல்லோருக்கும்  திறந்துவிட்டால்  பிறகு  சலுகைகளுக்கு  அர்த்தமிருக்காது  என்றாரவர்.