‘celaka’ என்று கூறிய ராயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

rayarஅம்னோவை ‘celaka’ என்று  கூறிவிட்டாராம்  டிஏபி  ஸ்ரீடெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்.எஸ்.என்.  ராயர்.  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவித்து  பினாங்கு  மாநிலச்  சட்டமன்றக்  கட்டிடத்துக்கு  வெளியில்  ஆர்ப்பாட்டம்  ஒன்று  நிகழ்ந்தது.

பினாங்கு   பெர்காசா  இளைஞர்  தலைவர்  ரிஸ்வாட்  அஸுட்டின்  உள்பட,  ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்றக்  கட்டிடத்தின்  கதவுகளைப்  பலமாக  தட்டியும்  ராயருக்கு  எதிராகக்  கூச்சலிட்டும்  தங்கள்  ஆத்திரத்தை  வெளிப்படுத்தினர்.

“மீண்டும்  அதைச்  சொல்ல  துணிச்சல்  இருக்கிறதா”,  என்று  சிலர்  கூவினர்.

சிலர்  கட்டிடத்துக்கு  உள்ளே  சென்றும்  சத்தமிட்டனர். வேறு  சிலர்  வெளியில்  நின்றபடி  “இனவாதி”  என்று  கூச்சலிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  ராயர்மீது  வீசி எறிய  முட்டைகளையும்  கொண்டு  வந்திருந்தனர்.