18 மாதங்களில் மின்கட்டணம் 39 விழுக்காடு உயரும்?

prabhaநீர், எரிபொருள் ஆராய்ச்சி  சங்கம் (ஏவர்),  இன்னும்  18  மாதங்களில்  மின்  கட்டணம்  மேலும்  உயரும்  என  ஆருடம்  கூறியுள்ளது. அது  24-லிருந்து  39 விழுக்காடுவரை  உயருமாம்.

2016,  ஜனவரிக்குள்  மின்சாரம்  தயாரிக்கப்  பயன்படும்  இயற்கை  எரிவாயுவின்  விலை  சந்தைவிலையை  அடிப்படையாகக்  கொண்டு  கணக்கிடப்படும்  என்றும்  அப்போது  மின்கட்டணம் உயரும்  என்றும்  ஏவர்  தலைவர்  எஸ்.பிரபாகரன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அரசாங்கம் இயற்கை  எரிவாயுவின்  விலையைச்  சந்தை  நிலவரத்துக்கு  ஏற்ப  உயர்த்துவதென  முடிவு  செய்திருப்பதால் மின்கட்டண  உயர்வைத்  தவிர்க்க  இயலாது  என்றாரவர்.