ஷரிபா அய்னி காலமானார்

sharifaமலேசியாவின்  இசை அரசி  எனப்  புகழப்பட்ட  ஷரிபா  அய்னி, இன்று  அதிகாலை  1.26-க்குக் காலமானார்.

61-வயது  நிரம்பிய  ஷரிபா,  நுரையீரல்  பாதிப்பால் இறந்தார்  என  ஆஸ்ட்ரோ  அவானி  கூறிற்று.

மலேசிய  இசையுலகுக்கு  ஆற்றிய  சேவைக்காக ‘Biduanita Negara’ விருது  அளிக்கப்பட்டுச்  சிறப்பிக்கப்பட்டவர்  ஷரிபா.

93 இசைத் தொகுப்புகளை  வெளியிட்டு  சாதனை  புரிந்தவர்  அவர். அவற்றில்  எட்டு  ஆங்கிலப்  பாடல்  தொகுப்புகளாகும்.

2003-இல்  அரசாங்கம்  அவருக்கு  டத்தோ  பட்டத்தைக்  கொண்ட  பங்லிமா  ஜாசா  நெகாரா(பிஜேஎன்) விருதளித்துச்  சிறப்பித்தது.