பிகேஆரினால்தான் எம்பி-ஆக இருப்பதை காலிட் மறக்கக் கூடாது’

pkr you ‘அப்துல்  காலிட்  இப்ராகிமை  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  நியமித்தது  பிகேஆர்தான்  என்பதால் அது  பதவி விலகச்  சொன்னால்  அவர்  விலகத்தான்  வேண்டும்  என்று  பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகமம்ட்  அகின் கூறியுள்ளார்.

“அவரது  அறிக்கை 13வது  பொதுத்  தேர்தலில்  சிலாங்கூரில்  வெற்றி  பெற்றதை  அடுத்து  பக்காத்தான்  ரக்யாட்  அதிலும்  குறிப்பாக  பிகேஆர்தான்  அவரை அப்பதவியில்  அமர்த்தியது  என்பதை  அவர்  புரிந்துகொள்ளவில்லை  என்பதைத்தான்  காண்பிக்கிறது.

“அவர்  தம்மைக்  கட்சிக்கு  மேலானவர்போலவும்  அவரால்தான்  சிலாங்கூரில்  பக்காத்தான்  வென்றது போலவும்  நினைத்துக்  கொண்டிருப்பதாகவும்  தெரிகிறது”, என்று  இஸ்கண்டர்  கூறினார்.

உத்துசான்  மலேசியாவில், “அரசாங்கம்  நினைத்தவுடன்  மாற்றங்களைச்  செய்துவிட  முடியாது”  என்று காலிட்  கூறியதாக  வெளிவந்துள்ள  செய்தி  பற்றிக்  கருத்துரைத்தபோது  அவர்  இவ்வாறு  தெர்வித்தார்.