காலிட் பதவி விலகல்? அரண்மனைகளில் ஊடகங்கள் முற்றுகை

istanaசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  பதவி  விலகுவார்  என்ற  வதந்தியைத்  தொடர்ந்து  செய்தியாளர்களும்  படப்பிடிப்பாளர்களும்  காலையிலிருந்து  சிலாங்கூரின்  இரு  அரண்மனைகளை  முற்றுகை  இட்டுள்ளனர்.

கிள்ளானில்  இஸ்தானா  ஆலம்  ஷா,  ஷா  ஆலமில்  இஸ்தானா  மெஸ்டிகா  தவிர்த்து சிலாங்கூர்  மாநிலச்  செயலகக்  கட்டிடத்திலும்  செய்தியாளர்கள்  திரண்டுள்ளனர்.

மந்திரி  புசார்  அலுவலகம், காலிட்  பதவி  விலகுவதை  மறுத்தது. அவர், இன்று  சுல்தானைச்  சந்திப்பதாக  மட்டும்  அது  கூறிற்று.

அவரின்  பத்திரிகைச்  செயலாளர்  அர்பா’இசா  அசிஸ்,  அது பொறுப்பற்ற  தரப்பினர்  கிளப்பி  விட்டிருக்கும்  புரளி  என்று  கூறினார்.