மா: மே 13 பற்றி துணைப் பிரதமர் குறிப்பிட்டது ஒரு ‘நினைவுறுத்தலே’

mahதுணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  அண்மையில்  மே 13  பற்றிப்  பேசியது  ஒரு “நினைவுறுத்தல்” மட்டுமே என மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  கூறியிருப்பதை   கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங்   ஒப்புக்கொள்கிறார்.
முகைதின், இனக் கலவரம்  மீண்டும்  நிகழாது  என்பதற்கு  உத்தரவாதமில்லை  என்று  கூறியதாக  அண்மையில்  உத்துசான்  மலேசியா  செய்தி ஒன்று  கூறியது.

“முழுச்  செய்தியையும்  படிக்கவில்லை, ஆனால்  ஒரே  வரியில்  மறுமொழி  தேவை  என்று  நீங்கள்  கேட்பதால்,   அமைதியான நாடு தேவை  என்ற நம்  விருப்பத்தை அது  நினைவுபடுத்துகிறது  என  லியோ  கூறியிருப்பதை  நானும்  ஒப்புக்கொள்கிறேன்”, என மா  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.