ஜாஹிட்: பாதுகாப்புத் தகவல்களைக் கசியவிட்டவர்கள் யார் என்பது தெரியும்

kidnapகிழக்கு  சாபாவில்  பல  ஆள்கடத்தல்  சம்பவங்களில்   உள்நாட்டுப்  பாதுகாப்புத்  தகவல்களைக்  கசியவிட்டவர்கள்  என்று  நம்பப்படும்  பலரை  அதிகாரிகள்  அடையாளம்  கண்டிருக்கிறார்கள்.

ஆனாலும்,  அவர்களைக்  கைது  செய்ய  முடியாதிருக்கிறது  என்று  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

“சந்தேகத்துக்குரிய அந்த  “ஆள்களை”க்  கைது  செய்ய  வலுவான  ஆதாரங்கள்  தேவை”, என்றவர்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.

நேற்று, சம்பூர்ணாவில்  மீன் வளர்ப்புப்  பண்ணை  உரிமையாளரைக்  கடத்தும்  முயற்சியில்  “அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும்”  தொடர்பு  உண்டு  எனக்  கூறப்படுவது  பற்றிக்  கருத்துரைத்தபோது  அமைச்சர்  இவ்வாறு  கூறினார்.