நீதிமன்றத்துக்கு வெளியில் ‘அன்வாரைக் கைது செய்’, ‘வாழ்க சைபுல்’ முழக்கங்கள்

saiful supportஇன்று  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு  விசாரணை  முடிந்த  பின்னரும்  சைபுல்  ஆதரவாளர்கள் சுமார்  100 பேர்  கலைந்து செல்லாமல்  நீதிமன்றத்துக்கு  வெளியிலேயே  சுற்றிக்  கொண்டிருந்தனர்.

கைகளில் அறிவிப்புப்  பலகைகளை  ஏந்தி  இருந்த  அவர்கள் “Tangkap Anwar”(அன்வாரைக்  கைது  செய்), “Hidup Saiful” (சைபுல்  வாழ்க) and “Hukum Peliwat” (குதப்புணர்ச்சி  செய்தவரைத்  தண்டிக்க  வேண்டும்)  என  முழக்கமிட்டனர்.

அவர்களில்  ஒருவர்,  அது  காசுக்காக வந்த கூட்டம்  அல்ல  என்றும்  தன்னார்வத்தால் திரண்ட  கூட்டம்  என்றும்  கூறிக்கொண்டார்.