வடக்கிலிருந்து இராணுவமும், புத்தர் சிலைகளும் அகற்றப்படாது!

mahinda-rajapaksaவடக்கில் இருந்து இராணுவமும், புத்தர் சிலைகளும் அகற்றப்படாதிருக்க தாம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றினால் தமக்கு ஆதரவளிப்பதாக சிலர் கூறுகின்றனர்.

தற்போதே வடமாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சிலர் அறிவித்துள்ளனர்.
ஹேக்கில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இராணுவ வீரர்களை நிறுத்தவும் முயற்சிக்கப்படுகிறது.

இவை எதுவும் நடைபெறாதிருக்க தாம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: