வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ), பிரதமர் பண மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டி வெளியிட்ட செய்தியைத் தற்காத்துள்ளது. அது அரசாங்கப் புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த அறிக்கையை நஜிப் அப்துல் ரசாக்கும் பார்த்திருக்கிறார் என்றும் அது தெரிவித்தது.
WSJ-இல் நேற்று வெளியான செய்தியில் 1எம்டிபி-இன் பணம் யுஎஸ்$700 மில்லியன் அவருடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
“அது கவனமாக செய்யப்பட்ட ஒரு புலனாய்வு. நாங்கள் பார்த்த புலனாய்வு ஆவணங்களை மலேசிய சட்டத்துறைத் தலைவருடனும் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
“பிரதமரும் அதைப் பார்த்திருக்கிறார்”, என WSJ ஹாங்காங் பிரிவுத் தலைவர் கென் பிரவுன் சிஎன்பிசி நேர்காணலில் கூறினார்.
புலனாய்வும் ஆவணங்களும் உறுதியானவை என்றும் ஆவணங்கள் விசாரணைகளின்வழி கிடைத்தவை என்றும் WSJ திடமாக நம்புகிறது என்றாரவர். விசாரணை என்றால் நம்பத்தக்க விசாரணை அரசியல் விசாரணை அல்ல என்றாரவர்.
பணம் அங்குமிங்கும் சென்று முடிவில் நஜிப்பின் கணக்கைச் சென்றடைந்தது தெரிகிறது. அதன் பின்னர் எங்கு சென்றது என்பது தெரியாது என்றாரவர்.
நஜிப் இக்குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார்.
“என் அரசியல் எதிரிகள் கூறுவதுபோல் 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேசனல் அல்லது வேறு எந்த நிறுவனங்களின் பணத்தையும் என் சொந்த ஆதாயத்துக்காக எடுத்துக் கொண்டதில்லை, அதை அந்நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன”, என்றவர் சொன்னார்.
“அரசாங்கப் புலனாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது
ன்றும் அந்த அறிக்கையை நஜிப் அப்துல் ரசாக்கும் பார்த்திருக்கிறார்”
அப்படி போடு அருவாளே !
மறுத்தால் மட்டும் போதாது… அந்த பணம் எப்படி உங்கள் கணக்கில் வந்தது என்று விளக்க வேண்டும்… சேமிப்பு பணமாக இருந்தால்… இருக்கலாம்…. அது உங்களின் தனி திறமை அல்லவே …
பொய் பித்தலாட்டம் அதிகார துஷ் பிரயோகம் ஊழல் ஆகியவை தலைவிரித்தாடும் பொழுது இயற்க்கை தன் வேலையை ஆரம்பித்து விடும்.
உங்கள் மனைவியைத் தவிர வேறு யார் உங்கள் அரசியல் எதிரி? அதையும் சொல்லி விடுங்களேன்!
தப்பை கூட சரியாக செய்ய தெரிய வில்லை!
இன்னும் நாட்டின் கடனை அடக்க எந்த முயற்சி இல்லை அன்னால் நாட்டின் பணத்தை திருட எத்தனை முயற்சி
விஞ்ஞானமுறையில் திருடத் தெரியலையே நம்ம பிரதமருக்கு ஆலோசகர் ரோஷம்மாவா?
தம்மிடம் அதிகாரம் இருக்கும் பொழுது அனைத்தையும் மூடி விடலாம், அனைத்தும் தம் சகாக்களின் கைவசம் இருப்பதால் எதுவும் வெளிவராது என்ற நம்பிக்கையில், தலையை சுற்றி வந்து வாயில் வைத்தால் யார் கண்ணுக்கும் தெரியாது என்று நம்பி கெட்டார். நம்பப்பட்டவகளே நடு ஆற்றில் கை விட்டதால் நம்பிக்கை நாயகன் மூழ்க வேண்டியதாயிற்று. தண்ணீர் மூக்கிற்கு மேல் சென்று விட்டது. செய்வினைப் பயனை இனி அனுபவித்து விட்டுதான் போகணும்.
பணத்தைத் திருடி நானே எனது சொந்த வங்கிக் கணக்கில் வைத்துக் கொள்வேனா?. அது அவரவர் மடத்தனத்தைப் பொறுத்தது!.