ஜுஸ்டோசைச் சந்தித்த எதிரணி ஆள் யார் என்பது போலீசுக்குத் தெரியும்

bukit amanபெட்ரோசவூதி  இண்டர்நேசனல்  நிறுவனத்தின்  முன்னாள்  தலைவர்   சேவியர்  எண்ட்ரி  ஜுஸ்டோவைச்  சந்தித்த  எதிரணித்  தலைவரின்  அடையாளம் தெரிய  வந்திருப்பதாக  போலீஸ் படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  இன்று  தெரிவித்தார்.

அவரின்  பெயரை  வெளியிட  மறுத்த  காலிட், அவர்  போலீசுடன்  ஒத்துழைக்க  வேண்டும்  மறுத்தால்  போலீசாரால்  தடுத்து  வைக்கப்படுவார்  என்றார்.

“அடையாளம்  தெரிந்து  விட்டது  அதனால்  அவரை  அழைப்போம்.

“அவர்கள்  எங்களுடன் ஒத்துழைப்பார்கள்  என்று  எதிர்பார்க்கிறேன். இல்லையேல்  அவர்களைக்  கைது  செய்து  காவலில்  வைக்க  நேரும்”, என  ஐஜிபி  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்தில்  நடைபெற்ற  ஹரி  ராயா திறந்த  இல்ல உபசரிப்பில் கூறினார்.