மகாதிர்: அம்னோவின் வெற்றிக்கு நஜிப் உரிமை கொண்டாடக் கூடாது

pwtcஅம்னோவின்  வெற்றிகள்  தம்மால்  சாதிக்கப்பட்டவை  என்று  கூறிக்கொண்டிருப்பதைப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்    விட்டொழிக்க  வேண்டும்  என்று முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்  வலியுறுத்தினார்.

“நாட்டை  மேம்படுத்துவதில்  அம்னோ  வெற்றி  அடைந்துள்ளது  என்று (நஜிப்) குறிப்பிட்டதை  ஒப்புக்கொள்கிறேன்.

“ஆனால், அது  அம்னோவின்  வெற்றி.  இந்தத்  தலவருடைய  வெற்றி  அல்ல. அது  தாம்  அடைந்த  வெற்றி  என்று  உரிமை  கொண்டாடக்  கூடாது”. இன்று  கோலாலும்பூரில்  அம்னோ  பொதுப் பேரவை  நடைபெறும்  புத்ரா  உலக  வாணிக  மையத்தில்  செய்தியாளர்களைச்  சந்தித்தபோது  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

“நான்கூட அப்படி  உரிமை  கொண்டாடியதில்லை”, என்றும்  மகாதிர்  சொன்னார்.