டிபிபிஏ-இல் அரசாங்கம் கையொப்பமிடுவதைத் தடுக்கும் என்ஜிஓ-களின் முயற்சி தோல்வி

bidஅங்காத்தான்  பீலியா இஸ்லாமும்(அபிம்) மற்றும்   இரண்டு  அரசு-சாரா  அமைப்புகளும்  சேர்ந்து  பசிபிக்  மண்டல  பங்காளித்துவ  ஒப்பந்தத்தில்  அரசாங்கத்தைக்  கையொப்பமிடாமல்  தடுப்பதற்கு  மேற்கொண்ட  முயற்சி  பலிக்கவில்லை.

அந்த  விவகாரத்தை  நீதியாய்வு  செய்ய  வேண்டுமென்று  கேட்டுக்கொள்ளும்  அவர்களின்  மனுவை  நீதிபதி  ஹனிபா  பரிகுல்லா  நிராகரித்தார்.

“ஒப்பந்தம்  இன்னும்  கையெழுத்தாகவில்லை   எனவே  அவ்விவகாரம்  நீதியாய்வுக்கு  உட்படவில்லை”,என்றவர்  தீர்ப்பளித்தார்.

நீதியாய்வுக்கு  உட்படவில்லை  என்றால்  அதன்மீது  நீதிமன்றங்கள்  தீர்ப்பளிக்க இயலாது  என்று  பொருள்.