தமிழனுக்குள் தமிழின ஒவ்வாமை ஒழியவேண்டும்; தமிழர் நாடு இன்றய அரசியல் இலக்காக வேண்டும்

contentwriting_1இந்தியன் என்ற ஹிந்துஸ்தானிய, இந்துத்துவா வார்த்தையை தமிழன் மட்டும் அழகுத்தமிழில் இந்தியன் என்ற  ஒரு இனத்தவன் பெயரில் அழைத்தான் .எல்லா மொழி பிரிவினை இனத்தையும் இந்தியன் என்று எழுதுவதை நான் மறுக்கிறேன். ஆதலால்  நான் இண்டியன் என்று மாற்றி எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

நம் தமிழர்கள் மட்டும் மொழி அழகில் இந்தி (மொழி) + யன்  இந்தியன் என்று  எழுதுகிறறோம். இண்டியாவின் INDIA 28 மாநிலத்தவன் தன் மொழி  சார்ந்த இனத்தை முதலில் அடையாளப்படுத்தி எழுதுவான். தமிழன் மட்டும் தன்னை “இந்தி” யன் என்று எழுதுவான். ஏன் ?

இந்தியன் அல்லது  இண்டியன் என்ற பொருளை நான் ஆராய்யப்போவதில்லை. காரணம் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் தான் இண்டியன் என்ற வார்த்தைக்கு பல காரணங்களை காட்டி வெள்ளைக்காரன் வைத்தானாம்.

இன்று என் பயணம் தமிழன் ஏன் எப்படி இண்டியனானான் என்ற தேடலுக்கு முன், யார் அந்த திராவிடன் ? தமிழர் மறுமலர்ச்சி ஏன் தமிழனிடம் தமிழர் இனம் தவிக்குது என்று  பார்க்க உள்ளோம்.

புரட்சிக்கவிஞ்சர் பாரதிதாசன் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றான்”..தமிழ்  இலக்கியம் தன்  அழகில் “தமிழ்  எமது தேசிய மொழி!
தமிழன் எமது தேசிய இனம் !
தமிழர் நாடு எனது தமிழ்த்தேசம் !
தமிழ்ச் சமயம் என   இறையாண்மை!
தமிழ்த்தேசம் என  குடியரசு!
அமைப்பதுதான் எமது தமிழரின் இலக்கு, என்றால்
தமிழனுக்கு விளங்காமல் எங்கள் சித்தனை தப்பென்று
சீறுவான். ஏன்  சீறுகிறீர் என்று கேட்டால் விளக்கம் தர தெரியாது.

தன்னை இண்டியன் என்று இல்லாத ஒன்றை ஏற்பான். தமிழன் மரபணுவில் பிறந்து நீ தமிழன் என்று சொல்லடா என்றால் இல்லை நான் ஓசியில் வந்த இண்டியன் என்பான். தமிழன் இண்டியன் பட்டியலிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது.இதுதான் இந்த கட்டுரையின் முகாமை நோக்கம்.

19 தாம்  நூற்றாண்டின் பிற்பகுதிக்கும்  20 தாம்  நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் அல்லது திசைகள் பிரித்தாண்டது . இந்துத்துவா என்றும் திராவிடம் என்றும் இழுத்து சீரழித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால்  RSS என்ற இயக்கம் இரண்டையும் அணைத்து ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன ? எல்லாம் நாம்தான் என்று தமிழனை இந்து என்றும் திராவிடன் என்றும் கசக்கி பிழிந்து தமிழன் குருதியை குட்டையாக்கி கலங்கிய குட்டையில் கடந்த 100 ஆண்டுகளாக அரசியல் மீன் பிடித்தான்.

இதை தமிழன்  உணராமல் தான் தமிழன்  போன்ற திராவிடன் என்று இன்றும் தமிழனுக்கு எதிராக அரசியல் சடுகுடு ஆடுகிறான். ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும் என்று சொன்னான். ஆனால் யாராச்சும் நினைத்தோமா…. மாடு பால் கறக்காது. பசுதான் பால் கறக்கும் என்று எந்த தமிழனாவது கேட்டோமா ?

இங்கும் மலேசியாவிலும் கூட தமிழர்கள் பல பேருக்கு தான் இண்டியனாக இருக்க ஆசை, காரணம் கேட்டால் வளர்த்த வளர்ப்பூ! அல்லது வாய்த்த மனைப்பூ! அல்லது புருஷன்பூ என்ற பல கலப்புகள் கோளாறாக உள்ளது, அதிலிருந்து வெளிவர பயந்து இண்டியன் குகைக்குள் குடும்பம் ஓடுது .

தமிழர் நாட்டு அரசியல் இங்கு நமக்கு வேண்டாமென பல அந்நியர் கலப்பு அப்பாவிகள் சொல்லக் கேள்வி பட்டுள்ளோம். நாட்டிலுள்ள 6 பத்திரிக்கைகளும் நான்கு பக்கங்களை தமிழக அரசியலை எழுதி இன்னும் இரண்டு பக்கங்கள் சினிமா போட்டு குஷிப்படுத்தி கிழிக்கும்போது காசு கொடுத்து வாங்கும் ஊமைகள் ஏன் என்று உணருவதில்லை.

தமிழர் நாட்டவனுக்கு தனி நாடு கிடைத்தால்தான் உலகத்தமிழனுக்கு  போராட ஒரு நாடு இருக்கென்று ஐநா உணரும் என்பதை இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை? இப்போது பதிவி விலகி போகவுள்ள பங்கி சொல்லுகிறார் தமிழ் ஈழ போரில் ஐநா தவறு செய்து விட்டதென்று …பார்த்தீர்களா உலக முட்டாள்த்தன தலைவர்கள் வேடிக்கையை?

இதனால்தான் சொல்கிறறோம் …..தமிழரின் விடுதலைக்கும் மறுமலர்ச்சிக்கும்  தன்சார்பு தற்காப்பு சாசனம் எழுத ஒரு நாடு வேண்டும். அல்லது தனித்தமிழர் நாட்டுக்கு இன புரட்சி வேண்டும்.இன புரட்சி இல்லாத ஏந்த நாடும் அரசியலில் வென்றதாக சரித்திரமில்லை தமிழா !

தமிழனின் தன்னியக்க முன்னேற்றத்துக்கு மாற்றான் வருவான் என்பது முட்டாள்தனம். குறிப்பாக இண்டியா இன விடுதலை போராட்டமும் திராவிட இன சுய சுத்தல்  அரசியலும் தமிழனை பிரித்து பங்கு போட்டு அனாதைகளாக்கும் திட்டம் மாறப்போவதில்லை. நாம் இணையும் வரை நாடோடிகள்தாம் இதைத்தான் கடந்த கட்டுரையில் தமிழன் உருப்பட மாட்டான் என்று
எழுதி இருந்தேன்.

இண்டிய விடுதலை இயக்கமும் திராவிட அரசியல் இயக்கமும் இரண்டு விதமான அரசியல் சமூகத்தேவைகளை முன் நிறுத்தி அரசியல் ஆடுகின்றன என்பதை தமிழன் உணர வேண்டும்.

இன்றுள்ள  வெள்ளையன் ஏகாதிபத்திய ஆட்சி சட்ட அமைப்பை வெளி ஏற்றி தமிழர் நாடு உள்ளிட்ட இண்டிய துணைக்கண்டங்கள் விடுதலை பெற வேண்டியது முகாமையானது. இதுதான் தமிழ் ஈழத்தின் விடுதலையும் கூட !!!! இதுபோலவே பார்ப்பன RSS ஆதிக்கம் பார்ப்பன சமூக ஏகாபோகம் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனரல்லாத மண்ணின் உரிமை மீட்ப்பு போராட்டமும் மிகவும் முக்கியமானது.

யார் மணிக்கட்டுவது என்று கேட்கலாம் ?

நாம் தமிழர்…தமிழர் தேசியம்…தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், தமிழர் களம், தமிழர் நாட்டு தமிழன்  சார்ந்த இயக்கங்கள் முன் நின்று ஒன்றிணைந்து முதலில் “தமிழர் நாட்டு தமிழர் பாதுகாப்புக்கு” முன் நகர்த்தல் முனைப்பு முடிவுகளை எடுக்க வேண்டும் .

மறுபடியும் யார் அந்த தமிழர்களின்  தனித்தமிழன் ?

திராவிட, பெரியார், இந்துத்துவா , RSS பார்வைகளில்லாமல் கலப்பிலாத …தாய் வழி தமிழர், தமிழ் வழி தமிழர் என்ற தமிழர் நாட்டு உருமாற்றத்திற்கு “தமிழர் நாட்டு தனி அரசியல் காலத்திற்குள்” வந்து இயக்கங்களின் தனித்தனி அரசியல் தாக்கம் இருந்தாலும்  நிறுத்திவிட்டு “தமிழர் தேசிய குடைக்குள்” நுழைந்து ஓட்டைகளை அடைத்து “தமிழர் நாடு” தமிழர்க்கு  மட்டும் என்ற தனியாட்சி உரிமைக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை.

தமிழர் நாடும் – தமிழர்  ஈழமும் நம் மண் உரிமை என்ற கவசம் ஏந்த உலகத்தமிழன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீபாவளி கொண்டாடி ஏமாத்துவது போதும் ..தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு போவோம், வென்றாக வேண்டும் தமிழரினம் !

பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
ammpon @gmail .com