தமிழர்கள் மரபு வழி வருவது இந்து சமயமா..? அல்லது தமிழர் சமயமா..? விவாதிக்க தயார..? இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்களுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் சவால்..?

உலகின் மூத்த இனமான தமிழர்கள் பின்பற்றி வந்தது தமிழர் சமயமா..! அல்லது இடையில் திணிக்கப்பட்ட இந்து (மதம்) சமயமா..! என மலேசிய நாம் தமிழர் இயக்கத்துடன் பொது மேடையில் விவாதிக்க இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் தயாரா..? என்று அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி கேள்வி எழுப்பினார்.

அண்மையில் “தமிழர் சமயம் என்று கூறி கொண்டு இந்து மதத்திற்குள் பிரிவினையை உண்டாக்காதீர்கள்” என பத்திரிகை செய்தி வெளியீட்ட திரு மோகன் சான் அவர்களுக்கு அறிவுட்டும் வகையில் யார் தமிழர்..? எது யாருடையது..? எவை திணிக்கப்பட்டது..? என்று தக்க தரவுகளுடன் விவாதிக்க எங்கள் குழு விரும்புகிறது என்றார்.

தமிழர்களின் அடிப்படை வரலாறு கூட தெரியாத இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் “தமிழர் சமயம் என பேசுபவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறுவதற்கு, அவருக்கோ அவரின் இந்து சங்கத்திற்கோ எந்த அருகதையும் கிடையாது எனவும் அடுத்த முறை பத்திரிகை செய்தி வெளியீடும் போது ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் துணை கொண்டு தெளிவு பெற்று பின்னர் அறிக்கை விடுமாறு அறிவுரை வழங்கினார்.

50,000 ஆண்டுகள் மூத்த வரலாற்று பெறுமை கொண்ட தமிழர் தேசிய இனத்திற்கு 5,000 ஆண்டுகள் கூட ஆகாத இடையில் வந்த இந்து மதம்/சமயம் எப்படி தலைமையேற்க முடியும்..? இந்தியர்கள் என்ற பெயரே இந்தியா எனும் நாடு பிறப்புக்கு பின்புதான் வந்தது. அதுவும் வெள்ளையர் அந்நாட்டு பல இன மக்களை மொத்தமாக அழைத்து. இந்தியா என்ற பெயர் பிறப்புக்கு முன்பே “பைந்தமிழ் நாடு” என்று பெயர் கொண்டு ஆண்டு வாழ்ந்த நாங்கள் யார்..? நாங்கள் பின்பற்றிய சமயம் என்ன..? வெள்ளையர் அழைத்த பெயர் எப்படி எங்கள் இனமாகும்..? என கேள்வி கணைகளை அடுக்கினார் திரு. வீ. பாலமுருகன்.

தமிழர் சமயத்தில் அடங்கிய சைவம், வைணவம், சன்மார்க்கம், இயற்கை வழிபாடு, குலதெய்வம் வழிபாடு போன்ற மீட்சிக்கு தமிழர்கள் நாங்கள் பணிசெய்வது ஏன் உங்களுக்கு உறுத்துகிறது..? எற்கனவே முந்தைய அரசுக்கு வழங்கிய பொது விடுமுறை பாரத்தில் மலேசிய தமிழர்களுக்கு நீங்கள்தான் தலைவர் என்று கையப்பம் இட்டு திறந்த வீட்டுக்குள் ஏதோ நுழையவது போல் நுழைந்து தமிழர்களின் கோபத்திற்கு ஆளானது   மறந்திருக்க மாட்டீர் என்றார்.

தமிழருடைய வரலாறு அறியாத, தமிழருடைய வாழ்வியலை தெரியாத, தமிழருடைய மரபுகளை விளங்காத  திரு. மோகன் சான் எப்படி தமிழர் சமயத்தை நிர்ணயிக்க முடியும்..?

தமிழர்கள் தங்களது வாழ்வியலை உணர்ந்து  மீட்டெழுந்தால் அவர்கள் பிரிவினைவாதிகளா..? தமிழர்களே அறியாமையிலே வைத்து ஆளலாம் என்ற   சூச்சம பருப்பு இனி வேகாது..! தமிழர்கள் தன் சொந்த இன வரலாற்றை உணர்ந்து விட்டார்கள். தான் வந்த வாழ்வியல் வழிகளை தெளிந்து விட்டார்கள். “இந்து, இந்தியர்கள்” எனும் நயவஞ்சக சூழ்ச்சிகள் ஒருபோதும் இனி பழிக்காது..!

அவரவர் அவர்தம் இனத்திற்கும், மொழிக்கும், சமய பண்பாடு மீட்சிக்கு பங்காற்றி கொள்ளுங்கள் வாழ்த்துகிறோம். அதைவிடுத்து தமிழர்கள்  இனத்திலோ, மொழியிலோ, சமயத்திலோ மற்றும் ஏனைய விடையத்திலோ   மாற்றான்கள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. நாங்கள் யாருடைய இன விடயத்திலும் தலையிடுவதில்லை. அப்படி மீறி மூக்கை நுழைந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க வேண்டிய கடமை தமிழர்கள் எங்களுக்கு ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம் என்றார்.

இந்நாட்டில் இருக்கும் தமிழ்ப் பள்ளியும் தமிழ்த் திருகோவில்களும் தமிழர் இனத்தின் கண்கள். எப்படி தமிழ்ப் பள்ளியில் தமிழ்க் கல்வி அடிப்படை உரிமையோ அதே போல் தமிழ்த் திருக்கோயில்களில் தமிழர் சமயம் வழி தமிழில் வழிபாடும் எங்களின் அடிப்படை தார்மீக உரிமையாகும்.

எனவே இந்து சங்க தலைவர் மோகன் சான் எங்கள் சவாலை ஏற்று களத்திற்கு வரவேண்டும். எங்களோடு வாதிட்டு வென்று காட்ட வேண்டும் என்று மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளருமான திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.