ஆலய வன்முறைக்குக் காரணம் வெளியிலிருந்து வந்தவர்கள்- பிரதமர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்களே காரணம் என்றார்.

தொடக்கநிலையில் கிடைத்த தகவல்களைப் பார்க்கையில் வன்முறையைத் தொடங்கியவர்கள் அப்பகுதிவாழ் மக்கள் அல்லவென்பது தெரிய வருவதாக அவர் சொன்னார்.

“இது மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையிலான மோதல் அல்ல.
வெளியிலிருது வந்தவர்களால் உருவான பிரச்னை இது”, என நேற்றிரவு புத்ரா ஜெயாவில் மகாதிர் கூறினார்.

முன்னதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஆலயக் கலவரத்தில் கிறிமினல் அம்சங்கள் இருப்பதாகவும் அதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.