ரோஸ்மா மூன்றாவது முறையாக நாணயச் சலவைத் தடுப்புப் பிரிவுக்குச் சென்றார்

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட விலைமதிப்பற்ற பொருள்கள் பற்றி மேலும் விசாரிக்கப்படுவதற்காக ரோஸ்மா மன்சோர் மூன்றாவது முறையாக நேற்று மினாரா கேபிஜே, போலீஸ் நாணயச் சலவைத் தடுப்புப் பிரிவுக்குச் சென்றார்.

ரோஸ்மா அங்கு மூன்று மணி நேரம் இருந்தார். அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று போலீஸ் வட்டாரம் மலேசியாகினியிடம் கூறிற்று.

காலை மணி சுமார் 9.45-க்கு அங்கு வந்த ரோஸ்மா பிற்பகல் மணி 1.00 அளவில் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால், விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை.

இந்த மிக அண்மைய வாக்குமூலம் பதிவு கடந்த வாரம் நடைபெற்றதின் தொடர்ச்சியாகும் என்று இதில் நெருக்கமான இன்னொரு வட்டாரம் தெரிவித்தது.