கோவில் குழப்பத்திற்கு ‘முஸ்லிம் கும்பல்’ மீது பழி சுமத்தியதிற்கு கணபதிராவ் மன்னிப்பு கோரினார்

 

திங்கள்கிழமை அதிகாலையில் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒரு ‘முஸ்லிம் கும்பல்’ மீது பழி சுமத்தியதற்காக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

“இந்த வன்முறை ஒரு கும்பலிருந்து தோன்றியது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

“எனினும், பலரின் அறிவுரைகளைப் பெற்ற பின்னர், குறிப்பாக அரசாங்கம் மற்றும் எதிரணி, நான் எனது அறிக்கையை ஒரு ‘முஸ்லிம் கும்பல்’ என்பதிலிருந்து ஒரு ‘குண்டர்கள் கும்பல்’ என்று மாற்றிக் கொண்டுள்ளேன்.

“நான் எவரது உணர்ச்சியைப் புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்று கூறினார்.