பிஎச் தலைமை மன்றக் கூட்டத்தில் அதிகாரிகள் சோதனை – பிகேஆர் கேள்வி எழுப்பியது

நேற்று ஒரு ஹோட்டலில், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமை மன்றக் கூட்டத்தை தவறாகச் “சோதனை” செய்ததாக, சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்ஷில் கூற்றுப்படி, அக்குழு மலாக்காவில் உள்ள லா கிரிஸ்தா ஹோட்டலுக்கு வந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்களைப் படம் எடுத்துள்ளது.

மத்திய அரசின் கோவிட்-19 தொற்றுநோய் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மூன்று கவுன்சிலர்கள், அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்த அனுமதிக்கும் அரசாங்க விதிகளை விளக்கிய பின்னரே சோதனை நிறுத்தப்பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

“கேள்வி: சில தரப்பினர் ஏன் மற்றவர்களை விட கடுமையான எஸ்.ஓ.பி. கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்?” என்று ஃபாஹ்மி, நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது கேட்டார்.

எஸ்.ஓ.பி. -ஐ மீறியதாகக் கூறப்படும் பாயா ரும்புட் பிகேஆர் கிளைக்கு, ஒரே நாளில் காவல்துறை மூன்று முறை சென்றதாகவும் ஃபஹ்மி கூறினார்.

ஒவ்வொரு முறை வருகை தரும்போதும் கட்சி தொண்டர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“அதிகாரிகளுக்கு மற்றொரு கேள்வி, அவர்கள் கிருமியைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்களா அல்லது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்களா என்பதுதான்,” என்று ஃபஹ்மி மேலும் கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) பிரச்சாரம், வீடு வீடாகச் செல்வது, ஒன்றுகூடுவது மற்றும் வாக்காளர்களுடன் உடல் ரீதியாகத் தொடர்புகொள்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டதன் மூலம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விதிகள் மிகவும் கண்டிப்பானவை, அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  துண்டுப்பிரசுரங்களை நேரடியாக விநியோகிப்பதைத் தடுக்கும் விதிகளை ஃபாஹ்மி மேற்கோள் காட்டினார்.