‘மலாக்காவில் பெர்சத்து தோற்றாலும், பிரதமரைத் தொடர்ந்து முஹைதின் ஆதரிப்பாரா?” – கிட் சியாங்

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), தேசிய முன்னணியிடம் தேசியக் கூட்டணி தோற்றாலும், முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைத் தொடர்ந்து ஆதரிப்பாரா என்று அவரது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

தனக்குப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும், தனக்குப் பின் பிரதமராக அந்தத் தலைவரை அனுமதித்தேன் என்றும் முன்னாள் பிரதமர் கூறியதை அடுத்து இந்த நிலைப்பாடு முக்கியமானது என்று லிம் கூறினார்.

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிறகு, நாடாளுமன்றத்தைக் கலைத்து  புதியத் தேர்தலுக்கு வழி வகுப்பதற்குப் பதிலாக, அம்னோவின் இஸ்மாயில் சப்ரியின் பெயரைப் புதியப் பிரதமராக முன்மொழிந்தார்.

பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமையிலான எதிர்க்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை அவர் விரும்பவில்லை என்பதும் ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.

“நவம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), பெர்சத்து அம்னோவால் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் பட்சத்தில், இஸ்மாயில் சப்ரியைத் தொடர்ந்து பிரதமராக முஹிடின் ஆதரிப்பாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்?” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று, ஷா ஆலமில் ஓர் இயங்கலை உரையாடலில் பேசுகையில், தேசிய முன்னணி நீண்ட காலமாக நாட்டை ஆண்ட பிறகு அரசியல் நிலப்பரப்பு மாற வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

முஹைதின் அம்னோவில் நீண்டகால அரசியல்வாதியாகவும், ஒருமுறை கட்சியின் துணைத் தலைவராகவும், 1எம்டிபி பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு துணைப் பிரதமராகவும் இருந்தார்.

அம்னோவில், அவரது இடம் பின்னர் துணைத் தலைவராக இருந்த அஹ்மட் ஜாஹிட் ஹமிடியால் மாற்றப்பட்டது.

இதற்கிடையில், முஹைதினின் நிலைப்பாட்டில் தான் ஆர்வமாக இருப்பதாக லிம் கூறினார், ஏனெனில் இது பிஎச் அறிக்கையின் “துரோகம்” ஆகும்.

“முஹைதின் பிஎச் தேர்தல் அறிக்கையை ஒருபோதும் நம்பவில்லை, இந்த அறிக்கை வாக்காளர்களை ஏமாற்றுவதற்கான ஒரு தந்திரம்,” என்று அவர் கேலியாக சொன்னார்.