‘கெடாவில் 4D நம்பர் கடைகள் மீதான தடை மலாக்கா பிஆர்என் -உடன் தொடர்புடையதாக இருக்கலாம்’

மலாக்கா பிஆர்என் | பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் 4D நம்பர் கடைகளைத் தடை செய்யும் முடிவிற்கும், தற்போது நடைபெற்று வரும் மலாக்கா மாநிலத் தேர்தலுக்கும் (பிஆர்என்) தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய அந்த அறிவிப்பு, ​​மலாய் பெரும்பான்மை இருக்கைக்குப் போட்டியிடும் பாஸ் மற்றும் தேசியக் கூட்டணியில் (தேகூ) அதன் கூட்டாளிகளுக்கு, மலாக்கா பிஆர்என் -உடன் ஒத்துப்போவதாக அவர்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.

அவாங் அஸ்மான் அவாங் பாவி

6 மாதங்களுக்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பு இது ஏன் அறிவிக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. இந்த நடவடிக்கை, மலாக்கா பிஆர்என் -ஐ வெல்ல குறிப்பாக, பாஸ் மற்றும் தேசியக் கூட்டணியில் பெர்சத்துவும் மலாய் வாக்காளர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக அரசியல் உந்துதல் கொண்ட செயலாகப் பார்க்கப்படுகிறது,” என்று, இன்று தொடர்பு கொண்டபோது, மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவாங் அஸ்மான் அவாங் பாவி மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோரின் அறிவிப்பு குறித்து, அந்தச் சமூக அரசியல் ஆய்வாளரிடம் கருத்து கேட்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட 4D நம்பர் கடை வணிக உரிமத்தை மாநில அரசு புதுப்பிக்காது என்று சனுசி கூறினார்.

குடும்ப நிறுவனங்களின் சரிவு போன்ற, சூதாட்டத்தால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சனுசி கூறினார்.

இந்த அறிவிப்பு தேசியக் கூட்டணியைப் பாதிக்கலாம் என்றும் அவாங் அஸ்மான் நம்புகிறார்.

“இருப்பினும், இந்த நடவடிக்கை நிச்சயமாக பாஸ் ஆதரவாளர்களிடையே பிரபலமாக இருக்கும், ஆனால் மலாக்கா மக்களின் ஆதரவிற்கும் ஏற்புக்கும் இது உத்தரவாதம் இல்லை, ஏனெனில் மலாக்கா வாக்காளர்கள் மிகவும் மிதமானவர்களாகவும், பல இன மற்றும் பல மதங்களைக் கொண்ட நாடு என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழப் பழக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

“சகிப்புத்தன்மை என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, இதனால்தான் கெடா எம்பியின் நடவடிக்கை மலாக்காவில் வாக்குகளின் ஊசலாட்டத்தைப் பெரிதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

“உண்மையில், இது கெராக்கான் போன்ற தேகூ உறுப்புக் கட்சிகள் மற்றும் மசீச மற்றும் மஇகா கட்சிகளின் ஆதரவாளர்களைக் கூட பிளவுபட கூடியதாக மாறியுள்ளது, ஏனெனில் அவர்கள் கூட்டமைப்பு அடிப்படையில் ஒரே அரசாங்க அமைச்சரவையாக உள்ளனர்.

ஓ ஈய் சுன்

“இந்த நடவடிக்கை தேகூ வாக்குகளை, குறிப்பாக பாஸ்-க்கு அதிகரிக்க முயற்சிக்கும் நடவடிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் முரண்பாடாக, இது பாஸ் மற்றும் தேகூ-க்கு மலாக்கா பிஆர்என் பிரச்சாரத்தில் பதிலளிக்க வேண்டிய ஒரு பொறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ஓ ஈய் சுன், சிங்கப்பூர் சர்வதேச விவகாரக் கழகத்தின் மூத்த உறுப்பினர், தேகூ சீன-பெரும்பான்மை இடத்தை வெல்வதற்கான வாய்ப்பை ஓரங்கட்டிவிட்டு, மலாய்-முஸ்லிம் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கலாம் என்று நம்புகிறார்.

“இறுதியில், மலாய்-முஸ்லிம் வாக்காளர்களால் மூன்று கூட்டணிகளுக்கு இடையிலான வாக்குப் போக்குக்கு ஏற்ப மலாக்கா மாநிலத் தேர்தல் முடிவு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

“ஏதாவதொரு சூழ்நிலையில், சீன வாக்காளர்கள் தேசியக் கூட்டணி அல்லது தேசிய முன்னணிக்கு (தேமு) வாக்களிக்காமல் போகக்கூடும். இதனால், சீனப் பெரும்பான்மையான நான்கு இடங்கள் தேகூ மற்றும் தேமு தொடர்புடைய அரசியல் கணக்கீடுகளில் இருந்து விலகலாம்.

“மறுபுறம், கெடாவில் தடை விதிப்பதன் மூலம், மத விவகார மேலாளராக அதன் நற்பெயரை வலுப்படுத்த முடியும் என்று தேகூ நினைக்கலாம், இதனால் மலாய்-முஸ்லிம் ஆதரவாளர்களின் வாக்களிக்கும் திறனைத் தூண்டலாம், இதனால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தேகூ நினைத்திருக்கலாம்,” என்று அவர் சொன்னார்.