தாய்மொழிப் பள்ளி விவகாரம்:  நீதிமன்றம் முடிவு செய்யட்டும்

தாய்மொழிப் பள்ளிகள் இருப்பதைப் பற்றி விவாதிக்கும் அரசியல்வாதிகள் “அமைதியாக இருந்து” நீதிமன்றத்தை முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முகமது ஹனிஃப் காத்ரி அப்துல்லா கூறினார்.

64 ஆண்டுகளாக இந்த அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அரசியல்வாதிகள் அமைதி காக்க வேண்டும் என்றும் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.

மலாய் மாணவர்களின் கூட்டமைப்பு (ஜிபிஎம்எஸ்) மற்றும் மலேசிய இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு கவுன்சில் (மாப்பிம்) ஆகியவை தாய்மொழிப் பள்ளிகளின் சட்டபூர்வமான தன்மைக்கு ஒரு புதிய சவாலை தாக்கல் செய்துள்ளன, இந்த வழக்கில் ஹனிஃப் காத்ரியை தலைமை வழக்கறிஞராக நியமித்தனர்.

இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான சட்ட சவால் வழக்குகளை கையாளும் மெசர்ஸ் அமெல்டா ஃபுவாட் அபி & அடில், 16 டிசம்பர் 2019 அன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சம்மன் மற்றும் உரிமைகோரல் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான அரசியலமைப்பு சவாலில், முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் கல்வி அமைச்சும் மலேசிய அரசாங்கமும் என்று ஹனிஃப் சுட்டிக்காட்டினார்.

சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள், மலாய் மொழியை தேசிய மொழியாக வரையறுக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 152 (1) வது பிரிவை மீறுவதாக அது அறிவிக்க கோரியது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 29 அன்று தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.