3,160 புதிய கோவிட்-19 நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 3,160 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை இப்போது 2,738,401 ஆக உள்ளது.

கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 17.3 சதவீதம் குறைந்துள்ளது.

3,528 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (டிசம்பர் 24) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (848)

ஜோகூர் (396)

கிளந்தான் (370)

தெரெங்கானு (270)

கெடா (269)

புலாவ் பினாங் (263)

பகாங் (225)

கோலாலம்பூர் (200)

பேராக் (194)

சபா (168)

நெகிரி செம்பிலான் (141)

மெலகா (118)

புத்ராஜெயா (23)

பெர்லிஸ் (20)

சரவாக் (19)

லாபுவான் (4)