கோவிட்-19 இறப்புகள் (பிப்ரவரி 2): இறப்பு எண்ணிக்கை 31,985.

நேற்று (பிப்ரவரி – 1) : ஏழு புதிய கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, மொத்த இறப்பு எண்ணிக்கை 31,985.

ஜொகூர் (2), சிலாங்கூர் (2), பகாங் (1), பேராக் (1) மற்றும் திரங்கானு (1) ஆகிய இடங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 30 நாட்களில் தினசரி சராசரியாக 15 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, 57,152 செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகள் உள்ளன. இது ஒரு வாரத்திற்கு முன்பு 45,702 செயலில் உள்ள நோய்த்தொற்றுகளிலிருந்து 25.1 சதவீதம் அதிகமாகும்.

நேற்று 5,566 புதிய நேர்வுகளில் இருந்து, அவர்களில் மொத்தம் 363 பேர் தற்போதைய கோவிட்-19 திரளலையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

திரளலையில் – இணைக்கப்பட்ட நேர்வுகளில், 285 (78.5 சதவீதம்) கல்வி நிறுவனங்களிலிருந்தும், 63 (17.4 சதவீதம்) பணியிடங்களிலிருந்தும் வந்தவர்கள்.

மீதமுள்ள நேர்வுகள் சமூகப் பரவல்கள் (6), முதியோர் இல்லங்கள் (4), தடுப்பு மையங்கள் (3), மத நிகழ்வுகள் (2) போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்களுடன் தொடர்புடையவை கண்டறியப்பட்டன.