சோஸ்மா வாக்கெடுப்பின் போது நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் – மரியா சின்

பிகேஆரின் மரியா சின் அப்துல்லா புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், மகளவையில் நிராகரிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தின் உட்பிரிவு ஒப்பந்த விவாதத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றார்.

தலைசுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பீக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா எம்.பி., பத்திரிகையிடம் தெரிவித்தார். அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாதுகாப்பு குற்றங்கள் அல்லது சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் 2012 சோஸ்மா வின் துணைப்பிரிவை ஐந்து வருடம் நீட்டிக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் வலியுறுத்தி ஒரு அறிக்கையை அவர் முந்தைய நாள் வெளியிட்டதால், மக்கள் கூட்டத்தில் மரியா இல்லாததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை விசாரணைக்காக 28 நாட்கள் வரை காவலில் வைக்க துணைப்பிரிவு காவல்துறைக்கு உதவுகிறது.

2016 ல் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் என்ற முறையில், அரசாங்கத்தின் தீர்மானத்தை தோற்கடிக்கப்பட்டதில் மரியா மகிழ்ச்சியடைந்தார்.

எவ்வாறாயினும், சோஸ்மா முழுவதுமாக ஒழிக்கப்படுவதை  தான் விரும்புவதாக அவளர் வலியுறுத்துகிறார்.

“சில பிரிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறோம்,நாங்கள் சோஸ்மாவை அகற்றவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்பட வேண்டிய துணைப் பிரிவைக் குறிப்பிடுகிறார்.

“இந்த துணைப்பிரிவு இல்லாவிட்டாலும், கைதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முன் 14 நாட்கள் வரை காவலில் வைக்க முடியும். சோஸ்மா இன்னும் எங்கள் சட்டத்தின் ஒரு பகுதியாகும், ”என்று அவரை பத்திரிக்கை தொடர்பு கொண்டபோது கூறினார்.

23.3.2022 அன்று, உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 85 எம்பிக்களும், எதிராக 86 பேரும், எஞ்சிய 49 பேர் வாக்களிக்காமலும் தோற்கடிக்கப்பட்டது.

மரியாவைத் தவிர, மூத்த அமைச்சர்கள் அஸ்மின் அலி மற்றும் ஹிஷாமுடின் ஹுசைன், சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், மனிதவள அமைச்சர் எம்.சரவணன், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுார் மூசா உட்பட பல அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையில், ஹிஷாமுடின் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக ஒரு  பத்திரிக்கை  தெரிவித்துள்ளது .

-freemalaysiatoday