விலைகள் உயர்ந்தன, அதோடு ரமடான் தேவையும் அதிகரித்துள்ளது

ஹோட்டல் நடத்துபவர்கள் மற்றும் உணவு வழங்குபவர்களின் கூற்றுப்படி,  விலைகள் அதிகமாக இருந்தபோதிலும் ரமடான் உணவுகளுக்கானன்  ஆரம்ப முன்பதிவு இரண்டு வாரங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டது,

விலைவாசி உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரமடான் உணவுகளின் விலையை சிறிது உயர்த்த வேண்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கோலாலம்பூரின் உலக வர்த்தக மையத்தின் இன்டான் தந்தியானா புத்தேரி ஜாஃபர், ரமடான் பஃபே தொகுளிப்புகளின் விலை ரிம10 அதிகரித்த போதிலும்,விற்பனையானது மிகவும் ஊக்கமளிக்கிறது என்றார் அவர்.

“ரமடான் உணவுகளுக்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளது, உதாரணமாக ‘ஆரம்ப சலுகை’ சீட்டுக்கு மட்டும், வழங்கப்பட்ட ரிம5,000 சீட்டுகளில் பாதி ஏற்கனவே விற்பனையாகிவிட்டன, மேலும் உண்ணாவிரதத்தின் முதல் வாரத்திற்குப் பிறகு அதிகமானோர் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,” இன்டன், மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனராக இருப்பவர், பத்திரிகையிடம் கூறினார்.

“கடந்த ஆண்டு, கடுமையான நடைமுறைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 வழக்குகள் இருந்தபோதிலும்  உண்ணாவிரதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் கூட கடைகளில் முன்பதிவுகள் எப்போதும் நிரம்பியிருந்தன, ,” என்று அவர் கூறினார்.

மூலப்பொருட்களின் விலை மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ரமலான் உணவு விலைகள் 15விழுக்காடு-20விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

நாடு இயற்ப்பு நிலைக்கு மாறி கட்டுப்பாடுகளை தளர்த்தியதில் அதிக நிறுவனங்கள் ரமலான் உணவுகளை முன்பதிவு செய்ய அனுமதித்ததாக இன்டன் கூறினார்.

சிறிதளவு விலை உயர்வு இருந்தபோதிலும், நோன்பு மாதத்தில் சில நாட்களுக்கு முன்பதிவு 50விழுக்காடு முதல் 60விழுக்காடு வரை இருந்ததாக உணவக முதலாளி அசுவான் ஓமர் கூறினார், மற்றொரு உணவகத்தின் செய்தித் தொடர்பாளர் நூருல் அஸ்னி ஜலீலா, அனாதைகளின் நோன்பு திறப்பதற்கு நிதியுதவி மற்றும் பல ரமடான் உணவு ஆர்டர்கள் வந்ததாகக் கூறினார்.

கடைத்தெருக்களில் பரபரப்பான நேரம்

முஸ்லிம்கள் நோன்பு மாதத்தைத் தொடங்கத் தயாராகும்போது, ​​வாடிக்கையாளர்கள் புனித மாதத்தைக் கொண்டாட இறுதி தயாரிப்புகளைச் செய்ததால், சந்தைகள், கடைத்தெருக்களிள் மற்றும் பல்பொருள் வர்த்தக மையங்களில் கூட்டம் அலைமோதியது.

வார இறுதி கடைக்காரர்கள் பெரும்பாலும் அடிப்படைத் தேவைகளை நாடியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

புத்ராஜெயாவில், காலை 8 மணி முதலே மக்கள் ப்ரீசிங்க்ட் 8 ஈரச் சந்தையில் குவிந்தனர்.

கோலாலம்பூரில் உள்ள சௌ கிட் மார்க்கெட்டில் பெரும் கூட்டம் இருந்ததால், போக்குவரத்து போலீசார் உள்ளே நுழைவதற்கு முன்பே ஜாலான் பகாங், ஜாலான் ராஜா அலங் மற்றும் ஜாலான் ராஜா போட் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிலாங்கூரில், ஷா ஆலத்தில் உள்ள பிரிவு 6 சந்தை அதிகாலை 4.30 மணி முதலே பரபரப்பாக இருந்தது.

நெகிரி செம்பிலானில் உள்ள செரம்பனில், ரமடான் மற்றும் ஐதில்பித்ரிக்கான ‘மந்தை’ பாரம்பரியம், சந்தை வாடிக்கையாளர்களின் நீண்ட வரிசையில் அதிகாலையில் இருந்து மாட்டிறைச்சி வாங்குவதற்கு குவிந்தனர்.

30 வயதான கசாப்புக் கடைக்காரர் ஃபதில் அஸ்னாவி ஜைதின், அம்பாங்கன் சந்தையில் ‘மாந்தை’க்காக ஏழு மாடுகளை வழங்கியதாகக் கூறினார்.

மலகாவில், நோர் அசிசா ஹசன், 54, என்ற இல்லத்தரசி, அரசாங்கம் சந்தை திருவிழாக்களை அடிக்கடி நடத்த வேண்டும் குறிப்பாக ரமலான் காலத்தில் மக்கள் மலிவான விலையில் பொருட்களைப் பெற உதவுவதற்காக என்று பரிந்துரைத்தார்,.

கோட்டா பாருவில் உள்ள கசாப்பு கடைக்காரர், ஜகாரியா அவாங், 69, தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிகாலை 3 மணி முதல் 10 மாடுகளை அறுத்ததாக கூறினார்.

பஹாங்கில், நோர் ஹஃப்சா ஒமர் மற்றும் அவரது கணவர் சியாபிக் அப் ரஹ்மான் ஆகியோர் வாடிக்கையாளர்களிடமிருந்து ‘சின்காவ்’க்கான முன்பதிவுகளைத் தொடர தயாராக இருந்தாக கூறினார்.

400 சின்காவ் பாக்கெட்டுகள் மற்றும் 300 பாட்டில்கள் சின்காவ் பானங்கள் விற்பனைக்கு தயார் செய்ததாக தம்பதியினர் தெரிவித்தனர்.

-freemalaysiatoday