முஹிடின் எல்லா கட்சிகளுடனும் பேசலாம் – பெர்சத்து

அடுத்த GE15 பொதுத் தேர்தலுக்கு  முன்னதாக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க “முழு ஆணையை” கட்சித் தலைவர் முகைடின் யாசின் தலைமையிலான அரசியல் பணியகத்திற்கு வழங்கியுள்ளதாக பெர்சத்து கூறியது.

நேற்று நடைபெற்ற கட்சியின் உச்ச ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்ததாக பெர்சத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

ஹம்சா ஒரு அறிக்கையில், கட்சி விவகாரங்கள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சமீபத்திய ஜொகூர் தேர்தல்கள் பற்றி இந்த சந்திப்பு நடைபெற்றது, இந்தக்கட்சி போட்டியிட்ட 33 இடங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகதீர் முகமட் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களை சமீபத்தில் ஜொகூர் தேர்தலை அடுத்து முஹிட்னை சந்தித்தார் என்ற செய்திகளுக்கு மத்தியில் பெர்சத்துவின் அறிவிப்பு வந்துள்ளது.

பிரதமர் பதவியை மீண்டும் பெற முகைடின் தனது உதவியை நாடியதாக மகதீர் கூறியிருந்தார். இருப்பினும், பெஜுவாங் தலைவர் முஹிடினுக்கு உதவ மாட்டார் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நான் முஹிட்னுடன்  பேச்சுவார்த்தை நடத்தினேன், அதேவேலையில் அவர் மீண்டும் பிரதமராக இருப்பதற்கு அரசியல் ஒத்துழைப்பு அல்லது ஆதரவு பற்றி விவாதிக்கவில்லை என்று அன்வர் கூறினார்.

-freemalaysiatoday