கோவிட்-19 (ஏப்ரல் 25): 2,478 புதிய நேர்வுகள், ஜனவரி 17க்குப் பிறகு மிகக் குறைவு

சுகாதார அமைச்சகம் நேற்று 2,478 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்தது, மொத்த நேர்வுகள் 4,433,551 ஆக உள்ளது.

ஜனவரி 17 (2,342)க்குப் பிறகு புதிதாகப் பதிவாகிய குறைந்த எண்ணிக்கையிலான நேர்வுகள் இதுவாகும்.

செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 68,008 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 46.2% குறைந்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (1,127)

கோலாலம்பூர் (356)

நெகிரி செம்பிலான் (195)

பினாங்கு (165)

கெடா (113)

ஜொகூர் (112)

பேராக் (101)

மலாக்கா (57)

சரவாக் (57)

சபா (48)

திரங்கானு (41)

பகாங் (40)

கிளந்தான் (27)

புத்ராஜெயா (22)

பெர்லிஸ் (11)

லாபுவான் (6)

கோவிட் -19 காரணமாக மேலும் 8 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அதில் 2 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 35,507 இறப்புகள் கோவிட்-19 க்குக் காரணம்.

சிலாங்கூரில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து கெடா (2), மலாக்கா (1)

1,809 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 98 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று அதிக எண்ணிக்கையிலான சேர்க்கைகள் சிலாங்கூரில் (147) அதைத் தொடர்ந்து ஜொகூர் (117) மற்றும் சபா (59) பதிவாகியுள்ளன.