மலேசியாவை சேர்ந்த கல்வந்த் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்

32 வயதான கல்வந்த், ஜூன் 2016 இல் 60.15 கிராம் டயமார்ஃபின் வைத்திருந்ததாகவும், 120.9 கிராம் போதைப்பொருளை கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் 23 வயதில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரைப் பற்றி கல்வந்த் சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் பணியகம் சிஎன்பியிற்கு தகவல் கொடுத்ததாக அவரது வழக்கறிஞர் டூ ஜிங் ஜி வாதிட்டார். ஆனால்,சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று கல்வந்தின் இறுதி மேல்முறையீட்டை நிராகரித்தது. கைது செய்யபப்ட்ட அந்த நபருக்கும் இந்தக் குற்றதிற்கும் சம்பந்த இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

கல்வந்தின் கருணை மனு வெற்றிபெறவில்லை, செவ்வாயன்று ஒரு அறிக்கையில், சிஎன்பி மலேசியா கல்வந்த் மீதும் சிங்கப்பூரர் நோராஷரீ கௌஸ் மீதும் உட்படுத்தப்பட்ட விசாரணைகள் “சட்டத்தின் கீழ் உள்ள முழு உரிய நடைமுறையின்” கீழ் வழங்கப்பட்டது.

ஏப்ரல் 27 அன்று சிங்கப்பூரில் ஹெராயின் கடத்தியதற்காக தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்ட மற்றொரு மலேசியரான நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரணதண்டனை போன்று இவரின் தண்டனையும் இன்று நிறைவேற்றப்பட்டது.

நேற்று மாலை 8 மணியளவில்,சிங்கப்பூர் தூதரகத்தின் முன் சுவராம் மனித உரிமை இயக்கத்தினர் மரண தண்டனையை தவிர்க்க கோரி அமைதி மறியல் செச்ய்தனர்.

FMT