கட்சித்தாவல் எதிர்ப்பு சட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்கும் புதிய சட்டங்கள் ஆகஸ்ட் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படலாம்.

பிரதமர் துறையின் அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) வான் ஜுனைடி துவாங்கு ஜாபர்(Wan Junaidi Tuanku Jaafar), மார்ச் மாதத்திலிருந்து தாமதமாகி வரும் மசோதாவிற்கான சமீபத்திய காலக்கெடுவை இன்று கோடிட்டுக் காட்டிய பின்னர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு அறிக்கையில், வான் ஜுனைடி ( மேலே ) இந்த மசோதா ஜூலை 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் மசோதாவை மறுஆய்வு செய்த தேர்வுக் குழு விவாதத்திற்கு ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதிகளை முன்மொழிந்துள்ளது என்றார்.

விவாதங்களுக்கு முன்னதாக, பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு மற்றும் அட்டர்னி ஜெனரல் அறை ஆகியவை முறையே ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு விளக்கமளிக்கும்

சட்டத்தை நிறைவேற்றுவது கீழ் மற்றும் மேல்-சபைகள் இரண்டிலும் சுமூகமாக நடந்தால், ஆகஸ்ட் 11 மற்றும் 26 க்கு இடையில் யாங் டி-பெர்துவான் அகோங்கிடம் இருந்து அரசாங்கம் ஒப்புதல் பெறலாம் என்று வான் ஜுனைடி கூறினார்.

இந்த மசோதா தொடர்பாக அமைச்சரவையால் பல முறை விரக்தியடைந்துள்ள வான் ஜுனைதியால் அமைக்கப்பட்ட தெளிவான காலக்கெடு இதுவாகும்.

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப் கடந்த ஆண்டு இந்த சட்டத்தை உருவாக்க  உறுதியளித்தார் மற்றும் அதை தயாரிக்கும் பணியை வான் ஜுனைடிக்கு வழங்கினார்.

ஏப்ரல் 11 அன்று இந்த மசோதா தாக்கல் செய்ய தயாராக இருந்த போது, எதோ புரியாத பீதியால்  அமைச்சரவை அதை ஒத்தி வைத்தது.

இது நாடாளுமன்றம் இந்த மசோதாவை மறுஆய்வு செய்ய வான் ஜுனைடி தலைமையில் ஒரு புதிய தேர்வுக் குழுவை உருவாக்க வழிவகுத்தது.