ஒரு கிலோ கோழி உச்சவரம்பை ரிம9.40 ஆக அரசு தொடரும்

ஒரு கிலோகிராம் கோழிக்கு ரிம9.40 என்ற உச்சவரம்பைத் தொடர அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) அமைச்சரவை ஒருமித்த முடிவை எட்டியது என்று கூறிய அவர், பல தரப்பினரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கோழி விலைகளை வெளியிட வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

நேற்று புத்ராஜெயாவில் வெளியிடப்பட்ட ட்வீட்டில், “பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத் மீதான சிறப்பு பணிக்குழு நாளைக்கூடிய பிறகு முடிவு தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்,” என்று நந்தா தெரிவித்தார்.

ஜூலை 30 அன்று, உள்நாட்டு வர்த்தக அமைச்சின் பொதுச் செயலாளர் அஸ்மான் முகமது யூசோஃப், ஆகஸ்ட் 31 க்குப் பிறகு கோழி விநியோகம் நாளுக்கு நாள் நிலையானதாக இருப்பதால், முன்பு ஒரு கிலோகிராமுக்கு ரிம9.40 ஆக நிர்ணயிக்கப்பட்ட கோழிக்கான உச்சவரம்பு விலையை அரசாங்கம் தொடராது என்று கூறினார்.

இதற்குக் காரணம்,  உருண்டைக் கோழியின் சந்தை விலை இப்போது உச்சவரம்பு விலையைவிடக் குறைவாக உள்ளது என்று கூறிய அவர், சில விற்பனையாளர்கள் ஒரு கிலோகிராமுக்கு RM6.99 என்ற மிகக் குறைந்த விலையையே வழங்குகிறார்கள் என்றும் கூறினார்.

வளர்ச்சிப் பிரச்சனைகள், நோய்வாய்ப்பட்ட கோழிகள் மற்றும் பலவற்றின் காரணமாக உற்பத்திச் சிக்கல்களைப் பெரும்பாலான சப்ளையர்கள் இனி எதிர்கொள்வதில்லை, இதனால் சப்ளை அதிகமாகிறது, இது தற்போதைய விலையைப் பாதிக்கிறது என்று அஸ்மான் கூறினார்.

முன்னதாக வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் ரொனால்ட் கியான்டி, நிலையான கோழியின் உச்சவரம்பு விலை மற்றும் ஆகஸ்ட் 31 க்குப் பிறகு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் மறுஆய்வு செய்யும் என்று கூறினார்.