அம்னோவை மறைவாகக் குற்றம் சாட்டுதல்: சையட் சாடிக் மன்னிப்பு கேட்குமாறு ஜொகூர் எம்பி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை மூவாரில் அம்னோ உறுப்பினர்கள் அவரது நிகழ்வில் இடையூறு விளைவித்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அம்னோ மற்றும் பின்னிடம்  பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு ஜொகூர் பிஎன், மூடா தலைவர் சையட் சாதிடிக் சையட் அப்துல் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

15வது பொதுத் தேர்தலுக்கான ஜொகூர் BN  இயக்குநரான ஒன் ஹபீஸ் காசி, சையட் சாடிக் (மேலே) ஆதாரம் மற்றும் சாட்சிகள் வழங்காமல், பேச்சு வார்த்தையில் அம்னோ மற்றும் BN இல் சலசலப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

“நேற்று வைரலான ஒரு வீடியோவில் சையட் சாடிக் கூறியதை நான் கவனமாகக் கவனித்தேன்”.

“GE15 இன் ஜொகூர் BN செயல்பாட்டு இயக்குநராக, அம்னோ மற்றும்  BN மீது மோசமான பிம்பத்தை ஏற்படுத்துவது போல், சையட் சாடிகின் தீவிர குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக மறுக்கிறேன்,” என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் கூறினார்.

அம்னோ மற்றும் BN மீது மக்களின் வெறுப்பு உணர்வுகளைத் தூண்டும் நோக்கில் எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு மன்னிப்பு கேட்கவும், பொறுப்பேற்கவும் சையட் சாடிக் வலியுறுத்தப்படுகிறார் என்று ஜொகூர் மந்திரி பெசார் கூறினார்.

“முதிர்ச்சியற்ற அரசியலை நிறுத்து! விரைவில் அம்னோ மற்றும் பிஎன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, மூடா ஏற்பாடு செய்திருந்த செராமா மெகா மூவாரில் அடையாளம் தெரியாத சுமார் 30 நபர்கள் கூடி, சையட் சாடிக் உரை நிகழ்த்தியபோது சலசலப்பை ஏற்படுத்தினார்கள்.

சையட் சாடிக் சமூகத்திற்குச் செய்த உதவிகளைப் பற்றிப் பேசும்போது இந்தக் குழு “penipu” (பொய்யர்) என்று திரும்பத் திரும்பக் கத்தியதாகக் கூறப்படுகிறது.