ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது – முகைதின் யாசின்

ஹராப்பானை விட எனது கட்சி தூய்மையானது,  ஊழல் விசாரணையில் யாரும் இல்லை என்கிறார்  முகைதின் யாசின்

இன்று இரவு தனது உரையில், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிஎன் இரண்டும் தனது கூட்டணியை விட ஒருமைப்பாட்டிற்கான தரத்தை குறைவாகக் கொண்டிருப்பதாக  கூறினார்.

PN வேட்பாளர்கள் அனைவரும் தூய்மையானவர்கள் என்றும், அவர்களில் யாரும் ஊழலுக்காக நீதிமன்ற வழக்கில் இல்லை என்றும் அவர் கூறினார்.

“பிஎன் மற்றும் ஹராப்பானில் தரவு நிலைகள் தனது PN கட்சியை விட குறைவான மதிப்பீட்டில் உள்ளன என்ரார்.

“அதனால்தான் ஊழல் வழக்குகளில் உள்ளவர்கள் (பிஎன் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்கள்) கூட தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று இரவு ஷா ஆலமில் தனது கட்சியின் கொள்கை அறிக்கையை வெளியிடிகையில் கூறினார்.

அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இது பிஎன் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்களான அமாட் ஜஹிட் ஹமிடி, லிம் குவான் எங் மற்றும் சைட்சாடிக் அப்துல் ரஹ்மான் போன்றவர்களைப் பற்றி  குறைகூறுவதாகத் தோன்றுகிறது.