வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேர் நான்கு கிளந்தான் நிவாரண மையங்களில் அடைக்கலம்

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேர் இன்று பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி பாசிர் மாஸ் மற்றும் குவா முசாங் மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 45 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் இடைநிலைப்பள்ளி Tok Deh(SK), Pasir Mas மற்றும் SK Jeram Tekoh, Dewan Semai Bakti Felda Chiku 7, Gua Musang இல் உள்ள  SK Limau Kasturi (1) ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்புத் துறையின் வெள்ளத் தகவல் இணையத்தளத்தின்படி, கோலா க்ராய்(Kuala Krai) மற்றும் கம்புங் தெமங்கனில்(Kampung Temangan) உள்ள சுங்கை கிளந்தானில் நீர் மட்டம் முறையே 20.4 மீ மற்றும் 14.2 மீ அளவீட்டைப் பதிவு செய்தபோது, மச்சாங் எச்சரிக்கை அளவைத் தாண்டியது.