ஹராப்பானின் படாங் செராய் வேட்பாளர் கருப்பையா காலமானார்

கெடாவில் உள்ள படாங் செராய் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம்.கருப்பையா காலமானார். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கும் தறுவாலில் அவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

PKR உறுப்பினராக 2018 பொதுத் தேர்தலில் MCAவின் லியோங் யோங் காங் மற்றும் PAS இன் முகமது சோப்ரி ஒஸ்மானை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

PKR பொதுச்செயலாளர் சைபுடின் நசுதின் இஸ்மாயில் பின்னர் அவரது மறைவு குறித்து ஊடக அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பையா நவம்பர் 19 அன்று மஇகாவின் சி சிவராஜ் மற்றும் மூன்று பேரை எதிர்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

தேர்தல் விதிகள் படி இந்த தொகுதிக்கான தேர்தல் வாக்கு சீட்டுகள் தாயாராகி உள்ள நிலையில், அவருக்கு பதில் இன்னொரு நபர் அனுமதிக்கப்படிவார என்பது தெளிவாக த்ரியவில்லை.