சிலாங்கூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம்

நேற்றிரவு தொடர்ச்சியான கன மழை காரணமாக, கிள்ளானின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் வெளியிட்ட புகைப்படங்கள் கிள்ளானின் தாமான் செந்தோசா, பாயு பெர்டானா மற்றும் கிளாங் உத்தமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்பதைக் காட்டுகின்றன.

பல வீடுகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக வீடியோக்கள் காட்டுகின்றன, அங்குப் பல மக்கள் தூக்கமற்ற இரவுபற்றிப் புகார் தெரிவித்தனர், வெள்ள நீர் தங்கள் வீடுகளுக்குள் புகுந்ததால் அவர்கள் விழிப்புடன் இருந்தனர்.

சிலாங்கூர் எம்பி அமிருதின் ஷாரி கிள்ளானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமன் மெலாவிஸை பார்வையிடுகிறார்

சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் தகவலின்படி, அதிகாலை 4 மணிவரை மழை தொடர்ந்து பெய்தால், மாநிலத்தில் உள்ள ஒரு சில ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் முகநூலின் கூற்றுப்படி, அவர் கிளாங்கில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஒன்றான தாமன் மெலாவிசை அதிகாலை 2.45 மணிக்கு, கிளாங் நகர சபைத் தலைவருடன் பார்வையிட்டார்.

பாதிக்கபட்டவர்களைக் காப்பாற்ற வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்லுமாறு அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதாக அமிருதின் கூறினார்.

இதற்கிடையில், தெற்கு சிலாங்கூரில் உள்ள பாங்கி லாமாவில் மீட்புப் பணியாளர்கள் மார்பு உயரமான நீரில் அவர்கள் மிதந்து வருவதாகப் பெர்னாமா தெரிவித்துள்ளது.

கிள்ளான், ஜாலான் கெபுனில் வெள்ள நீர் வடிந்து வருவதாகத் தேசிய செய்தி நிறுவனம் மேலும் கூறியது.