தியோமானுக்கான PN வேட்பாளர் வாக்குப்பதிவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மரணமடைந்தார்

தியோமன் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான PN வேட்பாளர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

முகமது யூனுஸ் ரம்லி(Md Yunus Ramli) இன்று அதிகாலை 3.30 மணியளவில் ரோம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

பகாங் தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் ஜம்ரி ஹம்லி(Zamree Hamli) மலேசியாகினியுடன் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு முகமது யூனுஸ் சுயநினைவின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இருப்பினும், இறந்தவர் ரோம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்

தியோமன் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் இறந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான வாக்களிப்பு பின்னர் அறிவிக்கப்படும் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று ஜம்ரி கூறினார்.

இன்று 15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) வாக்களிக்கும் நாள்.

தியோமான் தொகுதி முதலில் முகமது யூனுஸ், சுலைமான் பக்கர் (சுயேட்சை), ஒஸ்மான் ஏ. பக்கர் (பெஜுவாங்), முகமது ஃபட்ஸ்லி முகமது ராம்லி (பக்காத்தான் ஹராப்பான்) மற்றும் முகமது ஜோஹரி ஹுசைன் (பாரிசான் நாசியோனல்) ஆகியோருக்கு இடையிலான ஐந்து முனை மோதலாக இருந்தது.