தியோமான் வாக்குப்பதிவை டிசம்பர் 7 அன்று தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது

பெரிகத்தான் நேசனல் (PN) வேட்பாளர் முகமது யூனுஸ் ரம்லி மரணமடைந்ததைத் தொடர்ந்து, பகாங்கில் உள்ள தியோமான் மாநிலத் தொகுதிக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சலே வெளியிட்டுள்ள அறிக்கையில், வேட்புமனு தாக்கல் நவம்பர் 24ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்குப்பதிவு டிசம்பர் 3ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

“தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையைத் திரும்பப் பெற்ற பிறகு, தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது, மேலும் தியோமான் மாநிலத் தொகுதிக்கான வாக்குப்பதிவை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 13 நாட்கள் பிரச்சார காலம் இருக்கும், அதே நேரத்தில் தபால் ஓட்டுகளுக்கான இயங்கலை விண்ணப்பங்கள் இன்று முதல் நவம்பர் 22 வரை திறக்கப்படும்.

தியோமான், முவாத்சம் ஷா மற்றும் புக்கிட் இப்ராம் ஆகியவை ரோம்பின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மாநிலத் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோம்பின் நாடாளுமன்றத் தொகுதியிலும், மற்ற இரண்டு மாநிலத் தொகுதிகளிலும் வாக்களிப்பு செயல்முறை வழக்கம்போல் தொடரும்.

நவம்பர் 24 அன்று தியோமான் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் பஹாங்கின் ரோம்பினில் உள்ள தேவான் ஜுப்லி பேராக் சுல்தான் ஹாஜி அகமது ஷாவில் நடைபெறும்.

“முன்னர் சரிபார்க்கப்பட்ட அனைத்து தகுதிவாய்ந்த வேட்பாளர்களும் வாக்குச்சீட்டில் தங்கள் எண்ணை வரைய வேட்புமனு மையத்தில் இருக்க வேண்டும்”.

“இதற்கிடையில், தியோமனுக்கு GE15 தேர்தலில் போட்டியிட விரும்பும் புதிய வேட்பாளர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை… வேட்புமனுத் தினத்தன்று ஒப்படைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

61 வயதான யூனுஸ் அவரது குடும்ப உறுப்பினர்களால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், அதிகாலை 3.30 மணியளவில் ரோம்பின் மருத்துவமனையில் இறந்தார்.

‘ PASல் இருந்து புதிய வேட்பாளர் வருவார்’

சுங்கை புத்தேரி பாஸ் பிரிவுத் தலைவராக இருந்த இறந்தவர், முன்பு 2018 பொதுத் தேர்தலில் அதே மாநிலத் தொகுதிக்குப் போட்டியிட்டார்.

GE15 இல், தியோமான் மாநில இருக்கையானது யூனுஸ், சுலைமான் பாக்கர் (சுயேச்சை), ஒஸ்மான் ஏ பாக்கர் (பெஜுவாங்), முகமட் ஃபட்ஸ்லி முகமது ரம்லி (பக்காத்தான் ஹராப்பான்) மற்றும் முகமட் ஜோஹாரி ஹுசைன் (BN) ஆகியோருக்கு இடையே ஐந்து-முனைப் போட்டியைக் கண்டிருக்கும்.

ஏனென்றால் இந்த இடம் PAS-க்கு சொந்தமானது என்று பஹாங்கின் குவந்தானில் உள்ள இடைநிலைப்பள்ளி சுங்கை தலத்தில்((SK) Sungai Talam) இன்று வாக்களித்தபின்னர் சைஃபுதீன் செய்தியாளர்களிடம் கூறியதாகப் பெர்னாமா மேற்கோளிட்டுள்ளார்.

தியோமான் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது GE15ல் இதுவரையில் இரண்டாவது தேர்தல் ஆகும்- முதலாவது, அதன் தற்போதைய மற்றும் ஹராப்பான் போட்டியாளரான M கருப்பையாவின் மரணத்தைத் தொடர்ந்து படங் செராய் நாடாளுமன்றத் தொகுதியும் ஆகும்.

படாங் செராய்க்கான வாக்குப்பதிவும் டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

மலேசியர்கள் இன்று வாக்கெடுப்புக்கு செல்கின்றனர், ஏற்கனவே நவம்பர் 15 ஆம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவும் நடந்துள்ளது.